குமரி மாவட்டம் நித்திரவிளை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள இரண்டு கோவில் உண்டியல்கள் மற்றும் ஒரு அங்கன்வாடி மையம் பேக்கரி கடை மற்றும் ஒரு வீடு உள்ளிட்ட இடங்களில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மர்ம நபர் ஒருவர் திருட்டு முயற்சியில் ஈடுபட்டு எதுவும் கிடைக்காமல் மூதாட்டி ஒருவரின் வீட்டு சமயலறையில் வைத்திருந்த பழைய பன் மற்றும் பேரிச்சம் பழத்தை திருடி சாப்பிட்டு சென்றார்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் போலீசார் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் கைரேகை நிபுணர்களை கொண்டு தடயங்களை சேகரித்து விசாரணையில் இறங்கினர்.
பணமோ பொருட்களே திருடு போகாமல் இருந்ததால் ஏதோ சைக்கோ திருடனாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை பல்வேறு காவல் நிலையங்களுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டதில் இந்த திருட்டில் ஈடுபட்ட நபர் குறித்து போலீசாருக்கு பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன.
அவர் குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே மேல்புறம் பகுதியை கொத்தனார் வேலை செய்யும் ரெகு 46 என்றும் காலை வேளைகளில் கொத்தனார் வேலையும் இரவு நேரங்களில் பல இடங்களுக்கு சென்று திருடுவதையுமே பிரபல தொழிலாக கொண்டவர் என்றும் அருமனை மார்த்தாண்டம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும் தற்போது ஒரு திருட்டு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்து மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் கண்டிசன் பெயில் கையெழுத்து போட்டு வருவதும் தெரியவந்தது.
இதற்கிடையே தான் இந்த திருட்டையும் அரங்கேற்றி இருந்தது போலீசாருக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது. இதனையடுத்து ரெகுவை கைது செய்ய காத்திருந்த போலீசார் எதுவும் தெரியாதது போல் மார்த்தாண்டம் காவல்நிலையத்திற்கு கண்டிசன் பெயில் கையெழுத்து போட்டு விட்டு வீட்டிற்கு செல்வதற்கு பேருந்திற்கு காத்திருந்த வேளையில் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.
அவரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.