ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கிளைவ் பஜார் பகுதியில் எட்டுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அதே பகுதியில் முருகன் என்ற நரிக்குறவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் பன்றி பிடிப்பதற்காக நாட்டு வெடி தயார் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நாட்டு வெடி தயார் செய்து கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக வெடி வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் முருகன் (41)சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் அவரது மகன் பகவதி (வயது 21) உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்தார் ராணிப்பேட்டை துணை காவல்துறை கண்காணிப்பாளர் பிரபு தலைமையிலான போலீசார் வெடி விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வெடி விபத்து காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.