கோவை நஞ்சுண்டாபுரம் மேம்பாலத்தில் அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியதில் பின்புறம் அமர்ந்திருந்த நபர் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
நஞ்சுண்டாபுரம் பாலத்தில் நேற்று சௌரிபாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் (வயது 51) மற்றும் ஓலம்பஸ் பகுதியைச் சேர்ந்த வினோத் (வயது 32) இருவரும் YAMAHA fz இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
இவர்கள் நஞ்சுண்டாபுரம் பாலத்தில் வேகமாக சென்றதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக பாலத்தின் தடுப்பு சுவற்றின் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருசக்கர வானத்தில் பின்னால் அமர்ந்திருந்த சரவணகுமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போத்தனூர் போலிசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது தூக்கி வீசப்பட்ட பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.