கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்து பாலமலை செல்லும் ரோட்டில் திருமாலூர் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
இந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நாய் ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. நாய் வீட்டில் அங்குமிங்கும் விளையாடி கொண்டிருந்தது. திடீரென நாய் அங்கு இருந்த குடத்தில் தலையை விட்டு விளைாயடியது.
அப்போது எதிர்பாராத விதமாக குடத்திற்குள் நாயின் தலை மாட்டி கொண்டது. நாய் தலையை எடுக்க முயன்றும் முடியாததால் குரைத்தது. நாய் தொடர்ந்து குரைத்து கொண்டே இருந்ததால் வீட்டில் இருந்தவர்கள் வெளியில் வந்து பார்த்தனர்.
அப்போது நாயின் தலை குடத்திற்குள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக நாயை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை.
உடனடியாக பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து குடத்திற்குள் மாட்டிய நாயின் தலையை மீட்க முயற்சி செய்தனர். நாயின் கழுத்தில் எண்ணை தடவி மீட்பு பணி நடந்தது. 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குடத்திற்குள் சிக்கிய நாயை மீட்டனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.