தமிழகம்

போலீஸ் அனுப்பிய ‘அந்த’ வீடியோ.. சாலை மறியலில் மக்கள்.. 2 முறை காவலர் கைதானது ஏன்?

சென்னையில், பெண்ணுடன் நெருக்கமாக இருந்த புகைப்படம், வீடியோக்களை உறவினர்களுக்கு அனுப்பிய காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை: சென்னை மாநகரின் கோயம்பேடு போக்குவரத்து காவலராக ஆனந்த் (35) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர், காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடை அடுத்த மவுலிவாக்கம் ராஜராஜன் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமான நிலையில் குழந்தை இல்லை.

மேலும், கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவியை விவாகரத்து செய்த ஆனந்த், இரண்டாவதாக ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். ஆனால், ஆனந்தின் நடவடிக்கை பிடிக்காததால் அந்தப் பெண் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆனந்த் மது அருந்துவிட்டு வந்து தகராறு செய்வது, வீடு, வாகனங்களை அடித்து உடைப்பது, குடியிருப்பில் உள்ள பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வது போன்ற பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது.

ஒருகட்டத்தில், அந்தப் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக, மாங்காடு போலீசார் கடந்த மாதம் ஆனந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர் பணியிடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த ஆனந்த், மாங்காடு காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வந்துள்ளார்.

மேலும், மீண்டும் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அதே பெண்ணுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால், அந்தப் பெண் திருமணம் செய்ய மறுக்கவே, ஆத்திரமடைந்த ஆனந்த், திருமணத்திற்கு முன்பு இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை அந்த பெண்ணின் உறவினர்களுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண்ணின் உறவினர்கள், இது குறித்து போரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, போரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: கொண்டையை மறைந்த இரானி கொள்ளையர்கள்.. விமானத்துக்குள்ளே சென்று கைது.. செயின் பறிப்பு அரெஸ்ட் பின்னணி!

இதில், திருமணத்திற்கு முன்பு இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோக்களை அனுப்பியதை உறுதி செய்துள்ளனர். தொடர்ந்து, ஆனந்தை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Hariharasudhan R

Recent Posts

விரைவில் இபிஎஸ் – அண்ணாமலை சந்திப்பு? மத்தியில் ஒலித்த குரல்.. பரபரக்கும் அரசியல் களம்!

அதிமுக உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரம் வரும்போது, அதை தெரியப்படுத்துவோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.…

50 minutes ago

ஊரு விட்டு ஊரு வந்து பெண்ணை தீக்கிரையாக்கிய கொடூரம்.. தூத்துக்குடியில் பரபரப்பு!

தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி:…

2 hours ago

தோனியை நீக்குங்க..படு மோசம் CSK ரசிகர்கள்..இப்படியெல்லாமா பண்ணுவாங்க.!

தோனி களமிறங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…

2 hours ago

இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா.. விஜய்க்கு இபிஎஸ் அதிரடி பதில்!

தங்கள் கட்சியை வளர்ப்பதற்காகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் விஜய் அவ்வாறு கூறியுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலம்: சேலத்தில் இன்று அதிமுக சார்பாக…

3 hours ago

அய்யோ நான் ஸ்ருதி இல்லை..ஆபாச வீடியோவால் பாலிவுட் நடிகைக்கு சிக்கல்.!

பாலிவுட் நடிகை ஷாக் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" தொடரில் வித்யா எனும் கதாபாத்திரத்தின் தோழியாக நடித்து…

3 hours ago

ஹெட்போன் போட்டு இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இளைஞர்.. ரயில் மோதி பரிதாப மரணம்!

விழுப்புரம் அருகே, ஹெட்போன் போட்டுக் கொண்டு தண்டவாளம் அருகே அமர்ந்திருந்த இளைஞர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம்,…

4 hours ago

This website uses cookies.