பெண்களை செல்போனில் புகைப்படம் எடுத்த காவலரை பணியிடை நீக்கம் செய்து கோவை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கோயம்புத்தூர்: கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் பாலமுருகன். இவர் சாய்பாபா காலனியில் உள்ள ஒரு பேக்கரிக்கு சமீபத்தில் டீ குடிக்கச் சென்றுள்ளார். அப்போது அவர், அங்கு டீ குடித்துக் கொண்டிருந்த பெண்களை தனது செல்போனில் புகைப்படம் எடுத்ததாகத் தெரிகிறது. எனவே, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இது குறித்து அவரிடம் கேட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன், அங்கு இருந்தவர்களை தள்ளிவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளார். இதனையடுத்து உடனே அக்கம், பக்கத்தினர் விரைந்து சென்று பாலமுருகனை பிடித்து, சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து, காவலர் பாலமுருகனின் செல்போனை போலீசார் ஆய்வு செய்த போது, பெண்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இதையும் படிங்க : விவசாயிகளால் விஜய்க்கு சிக்கல்? தவெக மாநாட்டிற்கு ரூல்ஸ்!
இந்நிலையில், பாலமுருகனிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி, அதனை அறிக்கையாக காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணனிடம் சமர்பித்தனர். இந்த அறிக்கையின் அடிப்படையில், காவலர் பாலமுருகனை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு காவல் அதிகாரி ஒருவர் தவறாக நடந்து மாட்டிக்கொண்ட நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.