ஓடும் ரயிலில் இருந்து தப்பியோடிய கைதி.. போலீசாரை தள்ளிவிட்டு ESCAPE ஆனதால் பரபரப்பு!!
கர்நாடகா போலீசார் திருவனந்தபுரம் இலவட்டம் பகுதியை சேர்ந்த அன்சாரி (38) என்பவரை கஞ்சா வழக்கில் கைது செய்தனர்.
பின்னர் அவரை கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.பின்னர் அவரை கடந்த 2 ம் தேதி போலீசார் திருவனந்தபுரம் 2 வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
அங்கு ஆஜர்படுத்தி விட்டு மீண்டும் சிறையில் அடைப்பதற்காக போலீசார் பாதுகாப்புடன் கொச்சுவேலி – பெங்களூர் ரயிலில் B1 கோச்சில் பயணம் செய்து கொண்டு இருந்தனர்.
நேற்று நள்ளிரவு 12.50 மணியளவில் ரயிலானது பாலக்காடு – போத்தனூர் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டு இருந்தது
அப்போது ரயில் மெதுவாக சென்று இருந்த நேரத்தில் கைதி போலீசாரை ரயிலுக்குள் தள்ளிவிட்டு ரயிலில் இருந்து குதித்து தப்பி ஓடினார்.
இது குறித்து கர்நாடக ஆயுதப்படை போலீசார் போத்தனூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து சம்பவம் நடந்த பகுதியில் சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் இது குறித்து போத்தனூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கஞ்சா வழக்கு கைதியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
வடிவேலுவின் கம்பேக் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. அந்த சமயத்தில் திமுகவை எதிர்த்து…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
This website uses cookies.