கோவையில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற பேராசியரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயம்புத்தூர்: திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். முதுகலை பட்டதாரியான இவர், கோவையில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்து உள்ளார். அப்போது, தனது அசல் கல்விச் சான்றிதழ்களை அந்த நிறுவனத்தில் கொடுத்து உள்ளார்.
பின்னர், அந்த நிறுவனத்தில் வேலைக்குச் செல்வதை நிறுத்திய அப்பெண், மேற்படிப்பை தொடர்ந்து உள்ளார். இதற்கு அசல் சான்றிதழ்கள் தேவைப்பட்டு உள்ளது. ஆனால், தான் சேர்ந்த நிறுவனத்தில் சான்றிதழ்களைக் கொடுக்காததால், கோவையைச் சேர்ந்த பேராசிரியர் சிவப்பிரகாசம் என்பவரின் உதவியை நாடி உள்ளார்.
இந்த நிலையில், அசல் சான்றிதழ்களைத் தான் வாங்கி வைத்து உள்ளதாகவும், வீட்டில் வந்து பெற்றுக் கொள்ளுமாறும் சிவப்பிரகாசம் போனில் அப்பெண்ணிடம் கூறி உள்ளார். இதனையடுத்து, சிவப்பிரகாசம் வீட்டிற்கு இளம்பெண் சென்று உள்ளார். அங்கு சிறுது நேரம் பேசிய சிவப்பிரகாசம், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண், உடனடியாக குளியலறைக்குள் சென்று உள்ளார். பின்னர், உள்ளே இருந்தவாறே தனது தோழிக்கு மொபைலில் அழைத்து நடந்தவற்றைக் கூறி உள்ளார். இதனைத் தொடர்ந்து, அவரது தோழி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்து உள்ளார்.
இதையும் படிங்க: 2வது பிரசவத்திற்குச் சென்ற இருவர் பலி.. பதறிய பறிகொடுத்த சொந்தங்கள்.. தர்மபுரியில் நடந்தது என்ன?
இதன் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த வடவள்ளி போலீசார், இளம்பெண்ணை குளியலறையில் இருந்து மீட்டு, பேராசியரியரையும் அழைத்துக் கொண்டு கோவை மேற்கு அனைத்து காவல் நிலையத்துக்குச் சென்றனர். பின்னர், இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
This website uses cookies.