வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருநகர் விவேகானந்தர் முதல் குறுக்கு தெருவில் உள்ள குமரேசன் என்பவரது இல்லத்தில் ஆசியா இந்தோனேசியா பசிபிக் தீவுகளில் வாழக்கூடிய அரிய வகை களஞ்சிய ஆந்தை ஒன்று வழி மாறி வந்துள்ளது.
இதனைக் கண்ட சிறுமி சுசித்ரா உடனடியாக பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை அடுத்து குமரேசன் மற்றும் மோகன் குமார் ஆகியோர் உடனடியாக காட்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காட்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் பால்பாண்டி மற்றும் காவலர்கள் சதீஷ்குமார் ராஜேஷ்குமார் போன்ற குழுவினர் வீட்டில் உள்ள மரத்தில் இருந்த களஞ்சிய ஆந்தையை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.
மீட்ட களஞ்சிய ஆந்தையை காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் உள்ள காப்பு காட்டில் பத்திரமாக விட்டனர்.
இந்த வகை ஆந்தை சாதாரணமாக ஐந்து லட்சம் முதல் 6 லட்சம் வரை விற்பனையாவதாகும் இது பாதுகாக்கப்பட்ட இனமாக்கப்பட்டதால் வேட்டையாடுபவர்கள் இதனை கள்ளச் சந்தையில் 8 லட்சம் முதல் 10 லட்சம் வரை இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அதிகாரியிடம் கேட்டபோது சரணாலயத்துக்கு செல்லும் ஆந்தை பாதை மாறி இங்கு வந்திருக்கலாம் என்று கூறினர்.
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
இசைப்புயலுக்கு வந்த சோதனை ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இசைப்புயல் 32 வருடங்களுக்கு மேல் வீரியம் குறையாமல் வீசிக்கொண்டே இருக்கிறது. இக்கால தலைமுறைக்கும்…
மதுரை மாநகர் கீரைத்துறை காவல்துறையினருக்கு வில்லாபுரம் கிழக்கு தெரு முனியான்டி கோவில் அருகில் உள்ள கருவேலங்காட்டுக்குள் கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த…
களைகட்டும் கேங்கர்ஸ் சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து கலக்கிய “கேங்கர்ஸ்” திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட…
நடிகர் பாக்யராஜ் முன்னணி இயக்குநர், நடிகராக 80 மற்றும் 90களில் திகழ்ந்தார். இவர் உடன் நடித்த நடிகை பூர்ணிமா ஜெயராமை…
This website uses cookies.