கோவை: கோவை ரயில் நிலைய தண்டவாளத்தில் ஆண் ஒருவரின் கை துண்டாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ரயில் நிலையம் எப்பொழுதும் பரபரப்பாக இருக்கக்கூடியது கோவையில் இருந்து உள்ளூர் மாவட்டங்கள் மற்றும் வெளியூர்களுக்கு வெளிமாநிலங்களுக்கு பல்வேறு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று மாலை ஐந்தாவது பிளாட்பாரத்தில் பயணிகள் ரயில் கடந்து சென்றது. அதனைத்தொடர்ந்து ரயில் தண்டவாளத்தில் வலது கை துண்டாகி பிளாட்பாரத்தில் ரத்தத்தில் கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் சென்று அந்த துண்டாகி கிடந்த வலது கையை எடுத்து யாருடைய வலது கை என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயிலில் செல்லக் கூடியவர் கவனக்குறைவாக கையை வெளியே நீட்டி அதில் கை துண்டானதா? ஏதாவது பிரச்சனையில் கை வெடப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.