Categories: தமிழகம்

பைக்கில் சென்றவர்களை துரத்திய ஒற்றை யானை.. பயந்து ஓடிய பெண் யானையிடம் சிக்கி பரிதாப பலி : உடலை வாங்க மறுத்து மறியல்!

பைக்கில் சென்றவர்களை துரத்திய ஒற்றை யானை.. பயந்து ஓடிய பெண் யானையிடம் சிக்கி பரிதாப பலி : உடலை வாங்க மறுத்து மறியல்!

ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் தஞ்சம் அடைந்து 18 யானை கூட்டங்களை கடந்த வாரம் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டப்பட்டது. இந்நிலையில் ஒற்றை யானை மட்டும் வனப் பகுதிகளில் சுற்றித்திரிந்து கொண்டு இரவு நேரங்களில் வெளியேறி அருகே உள்ள விவசாயிகளின் விளைப் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது,

இன்று அதிகாலை அந்த ஒற்றை காட்டு யானை அனுமந்தபுரம் பகுதியில் சுற்றி திரிந்தது. அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த முனிரத்தினா என்ற இவர் கெலமங்கலம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலைக்காக சென்ற போது வழியில் சென்ற இருசக்கர வாகன ஓட்டியிடம் அவசரமாக வேலைக்கு செல்ல வேண்டும் எனக் கூறி உதவி கேட்டு வாகனத்தில் ஏறிச் சென்றுள்ளார் .

அப்போது எதிரே வந்த ஒற்றை காட்டு யானை துரத்தி தாக்கியதில் பெண் மட்டும் பலியானார் .இருசக்கர வாகனம் ஓட்டிசென்ற நபர் வாகனத்தை விட்டு தப்பிச் சென்று உயிர் பிழைத்தார்.

தகவல் அறிந்த கிராம மக்கள் பெண்ணின் உடலை வைத்துக் கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர் .இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த உத்தனப்பள்ளி போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஆனாலும் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் வரவேண்டும் என உடலை வைத்துக் கொண்டு மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒற்றை யானையும் சிறிது நேரம் அப் பகுதியிலேயே சுற்றி திரிந்தது அதனை அப்பகுதி மக்கள் வனப்பகுதிக்கு விரட்டினர். சாலை மறியல் காரணமாக உத்தனப்பள்ளி கெலமங்கலம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மேலும் சம்பவ இடத்திற்கு வந்த ஓசூர் காவல் துணை கண்காணிப்பாளர் பாபு பிரசாந்த் மற்றும் சூளகிரி தாசில்தார் சக்திவேல், வனச்சரக அலுவலர் பார்த்தசாரதி ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்ட பின்னர். இறந்த பெண்ணின் உடலை எடுக்க அனுமதித்தனர்.

இந்த நிலையில் அதிகாலை நேரத்தில் உத்தனப்பள்ளி – கெலமங்கலம் சாலையில் ஒற்றை காட்டு யானை பெண்ணை துரத்தி தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

2 மாதங்களாக கோவை சிறையில் விலகாத மர்மம்.. போலீசார் முக்கிய நகர்வின் பின்னணி!

கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…

10 minutes ago

தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…

47 minutes ago

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

1 hour ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

1 hour ago

விடுமுறை நாளில் சென்சார் பண்ண வேண்டிய அவசியம் என்ன? எம்புரான் விவகாரத்தின் உண்மை பின்னணி இதுதான்- ஓபனாக போட்டுடைத்த பிரபலம்

மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…

2 hours ago

சீரியல் நடிகை கொலை வழக்கில் டுவிஸ்ட்.. உல்லாசமாக இருந்த கோவில் பூசாரிக்கு மரண தண்டனை!

சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…

2 hours ago

This website uses cookies.