கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள சமயபுரம் பகுதி வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.இப்பகுதியில் சுமார் 400″க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதி என்பதால் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் காட்டு யானை,காட்டெருமை,மான், உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து பயிர்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில் கடந்த பல நாட்களாகவே பாகுபலி என்று அப்பகுதி மக்களால் செல்லமாக அழைக்கப்படும் ஒற்றைக்காட்டு யானையின் நடமாட்டம் அதிகமாகவே உள்ளது.
குறிப்பாக அதிகாலை வேளைகளில் வனப்பகுதியை விட்டு வெளியே வரும் பாகுபலி யானை சமயபுரம் பகுதியில் சாலையைக்கடந்து மறுபுறம் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து விடுகிறது.
இதைத் தொடர்ந்து மாலையில் விளை நிலங்களில் இருந்து மீண்டும் சமயபுரம் வழியாக சாலையைக்கடந்து வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது.குறிப்பாக இதுவரை பாகுபலி யானை மனிதர்கள் எவரையும் தாக்கியது இல்லை என்றாலும், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் காலை – மாலை வேளைகளில் தங்களது வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர்.
மேலும் மேட்டுப்பாளையம் வனத்துறை சார்பில் பாகுபலி யானை சாலையினை கடக்கும் வேளைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று அதிகாலை சமயபுரம் பகுதியில் சாலை கடக்க முயன்ற யானை சாலையில் வனத்துறையினர் நிற்பதை கண்டதும் ஆவேசமடைந்து பிளிறியபடியே வனத்துறையினரை துரத்தியது.
இதனால் வனத்துறையினர் அச்சமடைந்து தெறித்து ஓடினர். பின்னர்,சற்று நேரத்தில் யானை சாலை கடந்து சென்றது. அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
ஸ்ருதிஹாசனின் பிரேக்கப் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். இருவரும் லிவ்…
This website uses cookies.