திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள ஸ்ரீ சிவ் டிம்பர் மர சாமான்கள் தனியார் விற்பனை கடை மற்றும் கிடங்கில் மின் கசிவு காரணமாக திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தேக்கு மர கதவு ஜன்னல் உள்ளிட்ட பல்வேறு மரப்பொருட்கள் தீயில் கருகி கருகி நாசமானது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து பொன்னேரி அத்திப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வந்த 6 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ விபத்தில் உயிர் சேதங்கள் ஏதும் நிகழாமல் தவிர்க்கப்பட்ட நிலையில் குடோனில் இருந்த நாய் ஒன்று குட்டிகளை ஈன்று இருந்தது. தீ விபத்தில் மர குடோனில் தீயில் சிக்கிக்கொண்ட தனது ஒரு குட்டியை பரபரப்பாக மரப் பொருட்களை அப்புறப்படுத்தி கொண்டிருந்த ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் யாரையும் பொறுட் படுத்தாமல் உள்ளே சென்ற நாய் அனைத்து பகுதிகளிலும் தேடி பின்னர் தனது வாயால் அதன் குட்டியை கவ்விக் கொண்டு பத்திரமாக வெளியே கொண்டு போய் சேர்த்து தனது தாய்ப் பாசத்தை காட்டியது.
பரபரப்பான தீ விபத்து சம்பவத்தில் தாய் நாயின் பாச போராட்டம் மூலம் தனது குட்டியை மீட்ட சம்பவம் அங்கிருந்த அனைவரின் மனதையும் நெகிழ செய்தது .
தமிழகத்தில் சில கல்வி நிறுவனங்கள் சாதி பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அந்த கல்வி நிறுவனம் பயன்படுத்தும், வாகனம், கல்வி வளாகத்தில்…
ஜூனியர் நடிகர்களின் வேதனை ஒரு திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால் அதில் பல ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் இருப்பார்கள். அவர்கள் இடம்பெறும் காட்சிகள்…
கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பாராமெடிக்கல் சயின்ஸ்…
சேலம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதையும் படியுங்க: ஆட்சியில்…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இத்திரைப்படம்…
டாப் நடிகை தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா தற்போது தென் இந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.…
This website uses cookies.