திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள ஸ்ரீ சிவ் டிம்பர் மர சாமான்கள் தனியார் விற்பனை கடை மற்றும் கிடங்கில் மின் கசிவு காரணமாக திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தேக்கு மர கதவு ஜன்னல் உள்ளிட்ட பல்வேறு மரப்பொருட்கள் தீயில் கருகி கருகி நாசமானது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து பொன்னேரி அத்திப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வந்த 6 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ விபத்தில் உயிர் சேதங்கள் ஏதும் நிகழாமல் தவிர்க்கப்பட்ட நிலையில் குடோனில் இருந்த நாய் ஒன்று குட்டிகளை ஈன்று இருந்தது. தீ விபத்தில் மர குடோனில் தீயில் சிக்கிக்கொண்ட தனது ஒரு குட்டியை பரபரப்பாக மரப் பொருட்களை அப்புறப்படுத்தி கொண்டிருந்த ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் யாரையும் பொறுட் படுத்தாமல் உள்ளே சென்ற நாய் அனைத்து பகுதிகளிலும் தேடி பின்னர் தனது வாயால் அதன் குட்டியை கவ்விக் கொண்டு பத்திரமாக வெளியே கொண்டு போய் சேர்த்து தனது தாய்ப் பாசத்தை காட்டியது.
பரபரப்பான தீ விபத்து சம்பவத்தில் தாய் நாயின் பாச போராட்டம் மூலம் தனது குட்டியை மீட்ட சம்பவம் அங்கிருந்த அனைவரின் மனதையும் நெகிழ செய்தது .
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.