சாலையில் சென்ற காரில் திடீரென தீ பிடித்ததால் சமயோஜிதமாக செய்லபட்ட 3 நபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி அடுத்துள்ள கெஸ்ட் லைன் என்ற இடத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த ஹூண்டாய் காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த காரில் பெங்களூரு புறநகர் பகுதியான சந்தாபுரத்தை சேர்ந்த 3 நபர்கள் சந்தாபுரத்திலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மின் கசிவு காரணமாக காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காரில் இருந்த 3 பேரும் கீழே இறங்கி தப்பித்து ஓடி உள்ளனர்.
சாலையில் எரிந்து கொண்டிருந்த காரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைப்பார்த்த அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போக்குவரத்தை சரி செய்து எரிந்த காரை போலீசார் அப்புறப்படுத்தினர்.
பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
This website uses cookies.