கோவை: கோவை மதுக்கரை அடுத்த சுகுணாபுரம் பகுதியில் தனியார் பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையை சேர்ந்தவர் 25 வயதான, வினிதா மேரி இவர் நேற்று புலியகுளத்தில் தனது உறவினர் வீட்டு இறுதிச்சடங்கில் கலந்து கொண்டுள்ளார். பின்னர் நேற்று இரவு வினிதா மேரி, தன்னுடைய மாமனார் மதலை முத்துவுடன் ஸ்கூட்டரில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பாலக்காடு ரோடு, சுகுணாபுரம் அருகே தனியார் பள்ளி பேருந்து, வனிதா மேரி சென்றுகொடிருந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த விபத்தில் கீழே விழுந்த வினிதா மேரி பேருந்து டயரில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தார். இவரின் மாமனார் மதலை முத்து லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இந்த விபத்து குறித்து கோவை மேற்குப்பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உறவினரின் இறுதி சடங்கிற்கு கலந்துகொண்டு வீட்டிற்கு திரும்பிய இளம்பெண் இப்படி பேருந்து சக்கரத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.