கொடைக்கானல் டம்டம் பாறை அருகே சுற்றுலா பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 40 சுற்றுலாப் பயணிகள் கர்நாடக பதிவெண் கொண்ட சுற்றுலா பேருந்தில் கொடைக்கானலுக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சுற்றுலா வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை சொந்த ஊர் நோக்கி திரும்பிய போது பேருந்து டம் டம் பாறை அருகே வந்து கொண்டிருந்த நிலையில், பேருந்தின் ஓட்டுனர் சாலை ஓரமாக பேருந்தை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.
சரிவான பாதையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுனர் பேருந்தின் ஹேண்ட் பிரேக்கை மட்டுமே உபயோகித்து பேருந்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். இதனால் பேருந்து சரிவான பாதையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் கூச்சலிட்டுட்டுள்ளனர்.
நகர்ந்து சென்ற பேருந்து சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.இதனால் 40 பயணிகளும் விபத்தில் சிக்கினர்.பேருந்தின் பாதை அமைந்துள்ள பகுதி பள்ளத்திற்குள் சிக்கியதால் சுற்றுலா பயணிகள் வெளியேற முடியாமல் தவித்துள்ளனர்.
அவ்வழியாக வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு அங்கிருக்கும் கம்பி வழியாக ஒரு சேலையைக் கட்டி உள்ளிருந்த 40 பயணிகளையும் பத்திரமாக மீட்டனர்.
இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வரும் முன்பாகவே அனைவரும் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பேருந்து ஓட்டுனரின் கவனக்குறைவால் 40 சுற்றுலாப் பயணிகள் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.