கனமழை காரணமாக ஓடும் ரயில் மீது விழுந்த மரம்… உடனே ரயில் நிறுத்தம்.. தவித்த பயணிகள்!!
திண்டிவனம் அருகே காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மரம் முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. காரைக்காலில் இருந்து காரைக்கால் எக்ஸ்பிரஸ் நேற்று இரவு சென்னைக்கு சென்று கொண்டிருந்தது.
அப்போது திண்டிவனம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக, ரயில் ஒலக்கூர் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மிகப்பெரிய மரம் ஒன்று முறிந்து ரயில் மீது விழுந்தது.
இதனால் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் எந்த வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு இரும்பு பாதை ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே ஊழியர்கள், ரயில் மீது முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர் மழையின் காரணமாக மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஊழியர்கள் போராடி மரத்தை அப்புறப்படுத்தினர். இதனால் அவ்வழியாக செல்லும் ரயில்கள் திண்டிவனம், மயிலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டது. ரயில் மேல் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தப்பட்ட பிறகு ரயில்கள் புறப்பட்டு சென்றன. இதனால் ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
ஒரு பக்கம் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் போக்கு காட்டி வரும் நிலையில், சாமானியர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது மத்திய…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
This website uses cookies.