கேரளா, வயநாட்டில் பழங்குடியினரை காரில் தரதரவென இழுத்துச் சென்ற வீடியோ வைரலான நிலையில், இது தொடர்பாக 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
வயநாடு: கேரள மாநிலம், வயநாடு அடுத்த மானந்தவாடி பகுதியில் கபினி நதியின் இரண்டு கிளைகள் சங்கமிக்கும் இடமான கூடல்கடவு பகுதியில் செக் டேமுக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். அதிலும், நேற்று விடுமுறை நாள் என்பதால் அதிகமான சுற்றுலாப் பயணிகள் சென்று உள்ளனர்.
இந்த நிலையில், சுற்றுலாவிற்கு இரண்டு கார்களில் வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இது ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறி, ஒருவரை ஒருவர் தாக்க முயன்று உள்ளனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பழங்குடியின நபரான மாதன் என்பவர் அவர்களை சமாதானம் செய்ய முயன்றுள்ளார்.
ஆனால், சண்டையிட்டுக் கொண்டிருந்த ஒரு தரப்பினர் மாதனை தாக்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல், பலர் முன்னிலையில், அவரது கைகளை காரின் கதவில் சிக்க வைத்துவிட்டு, காரை இயக்கியுள்ளனர். இதனையடுத்து, மாதன் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தலையிட்டு மாதனை மீட்டுள்ளனர். மேலும், மாதனை விட்டுவிட்டு காரில் இருந்தவர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். ஆனால், இதனை பின்னால் வந்த வாகனத்தில் இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ வைரலானது.
இதையும் படிங்க: தமிழ்நாடு பாடநூல் கழகத்தை போதைப் பொருள் லாபத்துக்கு பயன்படுத்தினாரா ஜாஃபர் சாதிக்? அமைச்சருக்கு அண்ணாமலை வலியுறுத்தல்!
இதனிடையே, கால் விரல்களில் பலத்த காயம் அடைந்த மாதன் மானந்தவாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, காரின் பதிவு எண்ணைக் கொண்டு போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
அதில் அந்த கார், மலப்புறம் மாவட்டம் குற்றிப்புறம் முகம்மது ரியாஸ் என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, பழங்குடியின நபரான மாதன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விரைவில் இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்வோம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.