Categories: தமிழகம்

பெண் தீக்குளித்து தற்கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பம் : திருப்பூர் ஏடிஎஸ்பிக்கு கோர்ட் போட்ட உத்தரவு!!!

நீலகிரி மாவட்டம் தேவாலா அடுத்த பெருங்கரை உப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகேஷ். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. கடந்த 2009-ம் ஆண்டு தமிழ்ச்செல்வி தற்கொலை செய்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து தமிழ்ச்செல்வியை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் நாகேஷ் மீது இந்திய தண்டனைச் சட்டம் 306 என்ற சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இதன் பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு வழக்கு விசாரணையின் போது ஜாமின் வழங்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகளிர் கோர்ட்டில் நடந்து வரும் நிலையில் சாட்சிகள் விசாரணை முடிந்து இறுதி கட்டத்தில் உள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான அப்போதைய தேவாலா போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்காமல் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக இருந்துள்ளார்.
கிருஷ்ணசாமி தற்போது திருப்பூர் சைபர் கிரைம் பிரிவில் போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வரும் நிலையில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு இதுவரை 7 முறை சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

ஆனால் அவர் இதுவரை கோர்ட்டில் ஆஜராகவில்லை. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணசாமி ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மகிளா கோர்ட்டு நீதிபதி ஸ்ரீதரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விஜய் பட வசனத்தை வைத்து அலறவிட்ட அஜித்.. GOOD BAD UGLY படத்தை கொண்டாடும் ரசிகர்கள்!!

அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…

28 minutes ago

GBU படத்தால தூங்க கூட முடியல- பேட்டியில் வெளிப்படையாக புலம்பிய Darkkey

மாஸ் ஓப்பனிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம் முழுவதும்…

46 minutes ago

GBU படம் பார்க்க மகளுடன் வந்த ஷாலினி.. வீடியோ வைரல்!

நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. விடாமுயற்சிக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால்…

57 minutes ago

காதலனை திருமணம் செய்த மகள் கௌரவக் கொலை.. 6 மாத கருவை கலைத்து, சிறையில் தள்ளிய பெற்றோர்!

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் எஸ்.சி. காலனியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை சந்திரகிரி மண்டலம் நரசிங்காபுரத்தை சேர்ந்த…

1 hour ago

நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…

ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…

17 hours ago

ஹாரர் படத்தில் சிவகார்த்திகேயனா? புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்…

பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…

18 hours ago

This website uses cookies.