கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் ( எஸ்என்எஸ் ) கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார் யூடியூப் சேனல் ( ப்ளேக்சிப் ) நடத்தும் நிகழ்ச்சிக்காக யுவன் சங்கர் ராஜாவை அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மாணவர்கள் மத்தியில் பாடல் பாடியுள்ளார். இசை நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் திரளானோர் பங்கேற்றுள்ளனர். இதனால் கூட்ட நெரிசலால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நிகழ்ச்சியில் யுவன் சங்கர் ராஜா பாடல் பாடிய பொழுது மாணவ மாணவிகள் நடனமாடியுள்ளனர். இந்த நிலையில் அருகிலுள்ள தடுப்பு சுவர் சரிந்து கீழே விழுந்ததில் காவலர் உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
தற்போது காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சரவணம்பட்டி காவல் நிலையத்துல் பணிபுரியும் பெண் எஸ்எஸ்ஐ மற்றும் 5 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக ஒரு சினிமா பிரபலம் வருவதை முன்னிட்டு அங்க எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லையா என்பது மக்களின் கேள்வியாக உள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.