தமிழகம்

வீடு கட்டச் சென்ற இடத்தில் பழக்கம்.. பஸ் ஸ்டாண்டில் அரிவாள் வெட்டு.. பெண் கைதானதன் பின்னணி என்ன?

குமரியில் முறை தவறிய உறவில் இருந்த நபரை கொலை செய்ய முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்து உள்ளனர்.

கன்னியாகுமரி: குமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பருத்திவிளை புல்லுவிளையைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். கட்டிட வேலை செய்து வரும் இவர், தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டிடப் பணிக்காகச் சென்று உள்ளார். அங்கு அவருடன் பணிபுரிந்த சக தொழிலாளியான கருப்பசாமி என்பவரின் மனைவி பழனியாச்சியுடன் ஈஸ்வரனுக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

இதனை அடுத்து ஈஸ்வரனும், பழனியாச்சியும் தனியாக வீடு எடுத்தும் தங்கி வந்துள்ளனர். இதனிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஈஸ்வரன் தனது சொந்த ஊருக்கே வந்து தாயுடன் வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து, பழனியாச்சி தன்னுடன் சேர்ந்து வாழுமாறு ஈஸ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால் இதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்து உள்ளார் ஈஸ்வரன். இதனால் ஈஸ்வரனை கொலை செய்ய பழனியாச்சி திட்டமிட்டு உள்ளார். இந்தத் திட்டத்தின் படி கன்னியாகுமரி மாவட்டம், வடசேரி பேருந்து நிலையத்திற்கு ஈஸ்வரனை வரச் சொல்லியுள்ளார்.

இதன்படி பேருந்து நிலையத்திற்கு வந்த ஈஸ்வரன், அங்கு நின்று கொண்டிருந்த பொழுது திடீரென வந்த இரு இளைஞர்கள், ஈஸ்வரனை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதனால் கை மற்றும் கழுத்துப் பகுதியில் வெட்டுப்பட்ட ஈஸ்வரன், உடனடியாக அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதையும் படிங்க: விருது வாங்கச் சென்ற சிறுமி.. கேரளாவில் மீட்பு.. குமரியில் திடுக்கிடும் சம்பவம்!

இதனிடையே, இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து ஈஸ்வரனிடம் விசாரணை மேற்கொண்டனர். இதன்படி இது குறித்த தகவல் தெரிய வரவே, பழனியாச்சி மற்றும் இரண்டு இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த பழனியாச்சியை குமரி தனிப்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அரிவாளால் வெட்டிய இரண்டு இளைஞர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!

'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…

5 hours ago

‘விராட்கோலி’ அவரு முன்னாடி டம்மி…வன்மத்தை கக்கும் பாகிஸ்தான் நிர்வாகம்.!

மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…

5 hours ago

தமிழக வீரரால் இந்திய அணிக்கு தலைவலி…பெரும் சிக்கலில் ரோஹித்…முடிவு யார் கையில்.!

அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…

6 hours ago

படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…

6 hours ago

’அதற்கு நான் காரணமல்ல’.. ராஷ்மிகா வரிசையில் பிரபல நடிகை!

தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…

7 hours ago

அனுஷ்கா சர்மா சொன்னதும் வீடீயோவை டெலீட் பண்ணிட்டேன்..அசிங்கப்பட்ட நடிகர் மாதவன்.!

AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…

7 hours ago

This website uses cookies.