ஃபிரஷர் குக்கர் வெடித்து பெண் உயிரிழந்தது குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி சாந்தி (45). இந்த நிலையில், இவர் இன்று வழக்கம் போல் குக்கரில் சமையல் செய்து கொண்டிருந்து உள்ளார். அப்போது, திடீரென குக்கர் வெடித்துச் சிதறி உள்ளது.
இதில், சமையல் செய்து கொண்டிருந்த சாந்தி தூக்கி வீசப்பட்டு உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், சாந்தியை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சாந்தி ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறி உள்ளனர்.
பின்னர், இந்தச் சம்பவம் குறித்து அறிந்த கோவில்பட்டி மேற்கு போலீசார், மருத்துவமனைக்கு வந்து, சாந்தியின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்த கோவில்பட்டி மேற்கு போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குக்கர் விபத்தை தடுப்பது எப்படி? எவ்வளவு கால இடைவெளியில் குக்கருக்கான பராமரிப்பு பணிகளைச் செய்ய வேண்டும் என்பதை பிரஷர் குக்கரை வாங்கும்போதே, அதன் பாதுகாப்பு கையேட்டைப் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். அதனை பழைய கடைக்கு போட்டுவிடக் கூடாது. அதேபோல், நீராவி வெளியேறும் வால்வு தெளிவாகவும், சுத்தமாகவும் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: பிரியாணி கடையை முடித்துவிட்டு தினமும் ‘அங்கு’ சென்ற நபர்.. அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர் வாக்குமூலம்!
மேலும், பிரஷர் குக்கரில் எவ்வளவு உணவுப் பொருட்களை நிரப்ப வேண்டுமோ, அதனையே நிரப்ப வேண்டும். அதற்கு மேல் நிரப்பக் கூடாது. தொடர்ந்து, உணவுப்பொருட்களை சமைக்கும் போது அதன் அளவு அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். குறிப்பாக, தண்ணீர் இல்லாமல் பிரஷர் குக்கரை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது.
(பொறுப்புத்துறப்பு: குக்கர் விபத்துகளில் இருந்து தடுப்பதற்காக கொடுக்கப்பட்ட வழிமுறைகள் பல்வேறு தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இதற்கு, Update News 360 ஒருபோதும் பொறுப்பேற்காது)
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…
விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
This website uses cookies.