சேலத்தில் தனக்குத்தானே பிரசவம் பார்த்த பெண் அதிக ரத்தப்போக்குடன் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம்: சேலம் மாவட்டம், வாய்க்கால்பட்டறையில் தமிழ்ச்செல்வன் – ஜோதி தம்பதி வசித்து வந்தனர். இதில், தமிழ்ச்செல்வன் தச்சு வேலை செய்து வந்தார். மேலும், இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ள நிலையில், 4வது முறையாக ஜோதி கர்ப்பம் தரித்துள்ளார்.இதனையடுத்து, சமீபத்தில் ஜோதி அவரது தாய் வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், 7 மாதமான பிறகுதான் ஜோதி தாய்மை அடைந்திருந்தது, அவரது கணவருக்கு தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஜோதியின் பெற்றோருக்கு, தனது மகள் கருவுற்றிருக்கிறாள் என்பது தெரியாமலே இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், வீட்டில் இருந்த ஜோதிக்கு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது.
இதனையடுத்து, அவர் தனக்குத்தானே பிரசவம் பார்த்ததாகத் தெரிகிறது. இதில் பிறந்த பெண் குழந்தை இறந்த நிலையில், அதனை வீட்டின் பீரோவுக்கு அடியில் மறைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர், ரத்த வெள்ளத்தில் ஜோதி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அப்போதுதான், தனது மகளுக்கு பிரசவத்தின்போது ஏற்பட்ட ரத்தப்போக்கு என்பதை அவர்கள் அறிந்துள்ளனர். இதனையடுத்து, குழந்தை எங்கே என்று தேடிப் பார்த்த போது, பீரோவிற்கு அடியில் மறைத்து வைத்திருந்ததைப் பார்த்துள்ளனர்.
இதையும் படிங்க: அது எனக்கு கெளரவம்.. பாலையா சர்ச்சை நடனம் குறித்து ஊர்வசி ரவுத்தெலா விளக்கம்!
பின்னர், வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக பெண்ணின் உடல் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இது குறித்து ஆற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.