தமிழகம்

ஹேர் டிரையரால் துண்டான விரல்கள்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!

கர்நாடகாவில் ஆன்லைனில் வாங்கிய ஹேர் டிரையர் வெடித்து பெண்ணின் இரு கை விரல்களும் துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாகல்கோட்: கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டம், இலகல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபன்னா யார்னால். இவரது மனைவி பசவராஜேஸ்வரி யார்னால். பாபன்னா யார்னால், ராணுவ வீரராக பணியாற்றிய நிலையில், 2017ஆம் ஆண்டில் வீர மரணம் அடைந்தார். எனவே, தற்போது பசவராஜேஸ்வரி தனியாக வசித்து வருகிறார்.

இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் சசிகலா. இந்த நிலையில், இவர் ஆன்லைனில் ஹேர் டிரையர் (Hair dryer) ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இதனையடுத்து, அந்த ஹேர் டிரையர் கொரியர் மூலம் நவம்பர் 15ஆம் தேதி வீட்டுக்கு வந்து உள்ளது. அப்போது, பார்சலைக் கொண்டு வந்த நபர் சசிகலாவுக்கு கால் செய்து பார்சல் வந்து விட்டதாக கூறி உள்ளார்.

அப்போது மறுமுனையில் பேசிய சசிகலா, “நான் வீட்டில் இல்லை. தற்போது வெளியூர் வந்து இருக்கிறேன். எனவே, பார்சலை பக்கத்து வீட்டில் உள்ள பசவராஜேஸ்வரி என்பவரிடம் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்” எனக் கூறி உள்ளார். அதேநேரம், சசிகலா, பசவராஜேஸ்வரிக்கு போன் செய்து, ஹேர் டிரையரை வாங்கி வைக்கும்படி கூறி உள்ளார்.

இதையடுத்து ஹேர் டிரையரை வாங்கிய பசவராஜேஸ்வர், தனது வீட்டில் அதனை பயன்படுத்த முயன்று உள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக ஹேர் டிரையர் வெடித்துச் சிதறி உள்ளது. பின்னர், இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், பசவராஜேஸ்வரியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.

இதையும் படிங்க: சினிமா பிரபலங்கள் விவாகரத்து எல்லாமே நாடகமா? காரணமே Sham Divorce தான்!

இந்த விபத்தில் அவரது இரு கைகளிலும் உள்ள விரல்கள் பலத்த சேதமடைந்தனர். அதிலும், அவரது ஒரு கை செயலிழந்ததால், மருத்துவரின் அறிவுரைப்படி, கை துண்டிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், ஹேர் டிரையர் வெடித்ததில் அவரது இரு கைகளில் உள்ள விரல்களும் துண்டிக்கப்பட்டன. தொடர்ந்து அவர் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

மேலும், மின்கசிவு காரணமாக ஹேர் டிரையர் வெடித்து இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகக் கூறி உள்ள பாகல்கோட் போலீசார், வெடித்த ஹேர் டிரையரின் நிறுவனம் விசாகப்பட்டினத்தை மையமாகக் கொண்டு செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். அது மட்டுமல்லாமல், இச்சம்பவம் தொடர்பாக ஹேர் டிரையரை ஆர்டர் போட்ட சசிகலாவிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

12 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

13 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

13 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

13 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

13 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

14 hours ago

This website uses cookies.