தமிழகம்

அரசுப் பேருந்தில் கிடந்த பெண் சடலத்தின் மொபைல்.. விசாரணையில் பகீர் தகவல்கள்!

கேரளாவில், தகாத உறவில் இருந்த பெண்ணைக் கொலை செய்து புதைத்துவிட்டு, சினிமா பாணியில் தப்பிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொல்லம்: கேரள மாநிலம், கொல்லம் அருகே கருநாகப்பள்ளியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி (48). இவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளைப் பிரிந்து தனியாக வசித்து வந்து உள்ளார். இந்த நிலையில், இவர் கடந்த நவம்பர் 6ஆம் தேதி முதல் காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து, தனது சகோதரியைக் காணவில்லை என விஜயலட்சுமியின் தங்கை போலீசில் புகார் அளித்து உள்ளார். இந்த நிலையில், அம்பலப்புழா பகுதியில் பெண் ஒருவரின் சடலம் கிடந்து உள்ளதாக தகவல் கிடைத்து உள்ளது. இதன் பேரில், அப்பெண்ணின் சடலம் காணாமல் போன விஜயலட்சுமி என தெரிய வந்து உள்ளது.

பின்னர், விஜயலட்சுமியின் செல்போன் மூலம் போலீசார் விசாரணையைத் துவக்கி உள்ளனர். அப்போது, அதன் சிக்னல் எர்ணாகுளம் பகுதியில் காட்டி உள்ளது. அதேநேரம், கரூர் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் உடன் விஜயலட்சுமி அடிக்கடி பேசி வந்ததும் தெரிய வந்து உள்ளது.

இதனையடுத்து, ஜெயச்சந்திரனைப் பிடித்து போலீசார் விசாரித்து உள்ளனர். அப்போது, அவர் மீன்பிடி துறைமுகப் பகுதியில் வியாபாரம் செய்து வந்து உள்ளார். திருமணம் ஆகாத ஜெயச்சந்திரன் உடன் விஜயலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் இருவரும் தனிமையில் உல்லாசமாகவும் இருந்து வந்து உள்ளனர்.

அதிலும், ஜெயச்சந்திரன் வீட்டிற்கும் விஜயலட்சுமி அடிக்கடி சென்று வந்துள்ளார். அந்த நேரத்தில், செல்போனில் வேறொரு நபருடன் விஜயலட்சுமி பேசி வந்தது ஜெயச்சந்திரனுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடங்காத ஜெயச்சந்திரன், விஜயலட்சுமியை அரிவாளால் வெட்டி உள்ளார்.

இதையும் படிங்க: 14 மாதமாக ஆணுக்குச் செல்லும் மகளிர் உரிமைத் தொகை.. கலெக்டர் வரை சென்றாலும் நீதியில்லை!

பின்னர், விஜயலட்சுமியின் சடலத்தை வீட்டின் அருகே குழி தோண்டி புதைத்து உள்ளார். அது மட்டுமல்லாமல், விஜயலட்சுமியின் செல்போனை எர்ணாகுளம் பேருந்து நிலையத்தில் இருந்த அரசுப் பேருந்தில் வைத்திவிட்டுச் சென்று உள்ளார். பின்னர், இந்த செல்போனைக் கண்டறிந்த அரசுப் பேருந்து நடத்துனர், அதனை காவல் நிலையத்தில் ஒப்படைத்து உள்ளார் என்பதும் தெரிய வந்து உள்ளது.

தற்போது, எர்ணாகுளம் காவல் நிலையத்தில் இருந்த விஜயலட்சுமியின் செல்போனைக் கைப்பற்றி உள்ள கருநாகப்பள்ளி போலீசார், இந்தக் கொலையில் வேறு யாரேனும் தொடர்பில் உள்ளனரா என்றும் விசாரித்து வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

ஜிவி தமிழ் சினிமாவின் பொக்கிஷம்…அனிருத் தாக்கப்பட்டாரா..பிரபல தயாரிப்பாளர் பேச்சு.!

கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…

6 hours ago

அந்த ஐட்டம் பாடலை நான் பாடி இருக்கக்கூடாது..ஓபனாக பேசிய ஷ்ரேயா கோஷல்.!

பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…

6 hours ago

நான் யாருனு காட்டுறேன்…நெருப்பை பற்றவைத்த ‘குட் பேட் அக்லி’ டீசர்.!

பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…

8 hours ago

ஆட்சியரின் முட்டாள்தனமான பேச்சுக்கு காரணமே முதலமைச்சர்தான்.. அண்ணாமலை கண்டனம்!

சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர்…

8 hours ago

‘குட் பேட் அக்லி’ யுனிவர்ஸ் படமா…அதை நீங்க கவனிச்சீங்களா மாமே.!

குட் பேட் அக்லி என்ன கதை அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின்…

8 hours ago

உங்களை நம்பி தான் இருக்கேன்..தியேட்டர் ஓனர்களுக்கு ‘சப்தம்’ பட இயக்குனர் வைத்த கோரிக்கை.!

கங்குவா படத்தை போல் மாற்றி விடாதீர்கள்.! தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஈரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள்…

9 hours ago

This website uses cookies.