தமிழகம்

ஸ்கூட்டியில் சென்ற பெண்.. நண்பனுக்கு அழைப்பு.. இறுதியில் நடந்த துயரம்!

கிருஷ்ணகிரியில், பெண்ணை வழிமறித்து கத்தியால் குத்திக் கொன்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கஞ்சனூரைச் சேர்ந்தவர்கள் மாதேஷ் – தீபா (32) தம்பதி. இந்த தம்பதிக்கு கவுசிக்தரன் (12) என்ற மகனும், ஷிவானி (10) என்ற மகளும் உள்ளனர். இதில், தீபா, போச்சம்பள்ளியில் உள்ள தனியார் ஸ்கூட்டர் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றின் கேண்டீனில் பணியாற்றி வந்தார்.

மேலும், கணவர் மாதேஷ் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தீபா வேலையை முடித்துக் கொண்டு, வீட்டிற்கு தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, மர்ம நபர்கள் சிலர் தீபாவை பின் தொடர்ந்து வந்துள்ளனர்.

இதனால் அச்சம் அடைந்த தீபா, தனது நண்பரான பள்ள சூளக்கரையைச் சேர்ந்த கவுதம் (22) என்பவருக்கு போனில் அழைத்து, பின் தொடர்வது குறித்து கூறியுள்ளதாகத் தெரிகிறது. அப்போது கவுதம், நான் உன்னுடைய பின்னாலே வருகிறேன் என்றும், அதனால் நீ பயப்படாமல் செல் என்றும் அந்த பெண்ணிடம் கூறியதாகத் தெரிகிறது.

எனவே, தீபா ஸ்கூட்டரில் தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது, தீபாவை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், கஞ்சனூர் முருகன் கோயில் அருகே வழிமறித்து, அவரைக் கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த தீபா சரிந்து விழுந்துள்ளார்.

பின்னர், அங்கிருந்த மர்ம நபர்கள் தப்பியுள்ளனர். இதனையடுத்து, சிறிது நேரத்தில் தீபாவின் செல்போனில் இருந்து கவுதமிற்கு போன் வந்துள்ளது. அப்போது தீபா, தன்னை மர்ம நபர்கள் கத்தியால் குத்திவிட்டதாக கூறி அலறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கவுதம், அங்கு வேகமாக வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அறநிலையத்துறைக்கு ‘இதில்’ தான் கவனம்.. தென்காசி கோயில் முன்பு பற்றி எரிந்த தீ!

இதனையடுத்து, படுகாயங்களுடன் கிடந்த தீபாவை மீட்ட கவுதம், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு, சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால், செல்லும் வழியிலேயே தீபா உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்தக் கொலை தொடர்பாக சாமல்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, கவுதமிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேநேரம், தீபாவின் செல்போன் எண்ணிற்கு கடைசியாக யாரெல்லாம் பேசினார்கள் என்றும், அவரது ஸ்கூட்டரைப் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் குறித்தும், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

சூர்யாவை பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- பொதுமேடையில் விஜய்யை வம்பிழுத்த பிரபலம்!

கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

19 hours ago

ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…

கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…

21 hours ago

அதிகமான பாஜக எம்எல்ஏக்கள் இந்த முறை சட்டமன்றம் செல்வோம் : வானதி சீனிவாசன் உறுதி!

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…

21 hours ago

நீங்க பேசாம சிம்புவை கல்யாணம் பண்ணிக்கோங்க… திரிஷாவுக்கு வந்த திடீர் கோரிக்கை!

நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…

22 hours ago

விஜய் ஆபாச பட நடிகர்.. அவர் தந்தை ஆபாச பட இயக்குநர்.. குடும்பமே : சர்ச்சையை கிளப்பிய திமுக பேச்சாளர்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…

22 hours ago

போலீஸ் ரைடுக்கு பயந்து தப்பியோடிய அஜித் பட நடிகரை வளைத்து பிடித்த போலீஸார்! விசாரணை கெடுபிடி…

ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…

22 hours ago

This website uses cookies.