Categories: தமிழகம்

மூதாட்டியிடம் உறவினர் என நடித்து 8 சவரன் நகையை அபேஸ் செய்த பெண் : நூதன மோசடி சம்பவம்!!

மூதாட்டியிடம் உறவினர் என நடித்து 8 சவரன் நகையை அபேஸ் செய்த பெண் : நூதன மோசடி சம்பவம்!!

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் பெரிய வீதியில் வசிப்பவர் சுந்தர்ராஜ் மனைவி நீலாம்பாள்(86).

சுந்தர்ராஜ் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்த நிலையில் மூதாட்டி மட்டும் கணவர் வாழ்ந்த வீட்டில் அவர் நினைவாக தனியாக வசித்து வருகிறார்.

இவர் வீட்டிற்கு எதிர்ப்புறம் இவரது மகன் தமிழரசன் வசித்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் வீட்டில் தனியாக இருந்த நீலாம்பாளிடம் காரில் வந்த மர்ம பெண் தன் தந்தை ஒரு ஆசிரியர் என்றும் முசிறி பகுதியில் வசித்ததாக கூறிவிட்டு தங்கள் கணவர் இறந்ததை கேள்வி பட்டு தங்களை பார்க்க வந்தோம் என்று கூறி சுந்தராஜ் படத்திற்கு மாலை அணிவித்து உள்ளார்.

நீலாம்பாள் கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் செயின் மற்றும் கையில் அணிந்திருந்த 2 சவரன் வளையல்களை கழட்டிக் கொடுக்குமாறும் அதை தான் உங்கள் கணவர் படத்தில் வைத்து சாமி கும்பிட வேண்டும் என்று மர்மபெண் கூறியதால் மூதாட்டி எதார்த்தமாக நகைகளை கழட்டி கொடுத்துள்ளார்.

பின்பு பேசிக் கொண்டு இருக்கும் பொழுது மர்ம பெண் நைசாக மர்மப் பெண் அங்கிருந்து காரில் தப்பி சென்றுள்ளார். அவர் சென்ற பின்பு தான் மூதாட்டிக்கு நகையின் பற்றிய நினைவு வந்தது இதனைத் தொடர்ந்து அவர் தன் ஏமாற்றப்பட்டதை தனது எதிர் வீட்டில் உள்ள மகனிடம் கூறியுள்ளார்

இது குறித்து அவரது மகன் தமிழரசன் உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் பகலில் மூதாட்டியை நூதன முறையில் மர்மபெண் ஏமாற்றிய இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சத்தமே இல்லாமல் உதவி செய்யும் அஜித்… குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு!

ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று குடியரசுத்…

31 minutes ago

திமுகவில் 2 விக்கெட் காலி.. இன்னும் பல தலைகள் உருளும்.. பார்த்து ரசிக்கலாம் : ஹெச் ராஜா பகீர்!

இந்திய அரசியலமைப்பின் சிற்பி பாரத் ரத்னா பீமாராவ் அம்பேத்கர் கஜேந்தியை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில்…

51 minutes ago

பிடிச்ச வேலையை என் வாயாலயே வேண்டாம்னு சொன்னேன்- மேடையில் கலங்கிய மணிமேகலை

விஜய் டிவியில் இருந்து விலகல் 90ஸ் கிட்களின் மனதிற்கு நெருக்கமான தொகுப்பாளினி என்றால் அது மணிமேகலைதான். முதலில் சன் மியூசிக்…

55 minutes ago

கார் விபத்தில் பிரபல பாடகி சின்னப்பொண்ணு இறந்துட்டாரா? பதறிய கனிமொழி!

தமிழ் சினிமாவில் நாட்புற பாட்டை பாடி புகழ்பெற்றவர் சின்னபொண்ணு. இவர் நாட்டுப்புற பாட்டையே அடிமாற்றாமல் சினிமாவிலும் தனது பாணியை அப்படியே…

1 hour ago

நடிகையை கட்டிப்பிடித்து கடித்த பிரபுதேவா.. படப்பிடிப்பில் நடந்த ஷாக் சம்பவம்!

சினிமா படப்பிடிப்பில் நிறைய சம்பவங்கள் எதிர்பாரா வகையில் நடப்பதுண்டு. சில சம்பவங்கள் பெரிய பிரச்சனையாக வெடித்துவிடும், சில சம்பவங்கள் சத்தமே…

2 hours ago

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

17 hours ago

This website uses cookies.