நெல்லை ராதாபுரம் அருகே தெற்கு கும்பிலாம்பாடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (40). இவர் விவசாயம் செய்து வருகிறார்.
அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான தோட்டத்தில் காய்கறிகளை பயிரிட்டு அதைப் பறித்து சந்தைக்கு அனுப்பி வருவார்.
காய்கறிகளை பறிக்க அதே பகுதியில் உள்ள ஆண்களும், பெண்களும் தினசரி கூலி அடிப்படையில் அவரது தோட்டத்திற்கு வேலைக்குச் செல்வார்கள்.
இந்த நிலையில் அவரது தோட்டத்தில் வெண்டைக்காய் நன்கு காய்த்து விற்பனைக்கு தயாராக இருந்தது. இதனால் செல்வகுமார் வெண்டைக்காய்களை பறிக்க அதே பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலரை வேலைக்கு அழைத்துள்ளார்.
இதன் அடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி (35) என்பவரும் சமீபத்தில் செல்வகுமாரின் காய்கறி தோட்டத்திற்கு வெண்டைக்காய் பறிக்கச் சென்றார்.
சக விவசாய தொழிலாளர்களுடன் சரஸ்வதி வெண்டைக்காய் பறிப்பதை பார்த்த செல்வகுமார் அவரை அழைத்துள்ளார். முதலாளி கூப்பிடுகிறாரே என்ற அடிப்படையில் சரஸ்வதி அங்கு சென்றுள்ளார்.
அப்போது சரஸ்வதிக்கு செல்வகுமார் பாலியல் தொல்லை கொடுத்து அத்துமீற முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சரஸ்வதி அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு தப்பியோடினார்.
இதுகுறித்து அவர் ராதாபுரம் காவல் நியைத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் ராதாபுரம் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்யச் சென்றனர்.
ஆனால் செல்வகுமார் போலீசார் வருவதை அறிந்து தலைமறைவானார். வெண்டைக்காய் பறிக்கச் சென்ற பெண்ணிடம் அத்துமீற முயன்ற பாஜ நிர்வாகியால் ராதாபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…
This website uses cookies.