திருச்சி மாவட்டம், முசிறி அடுத்துள்ள காட்டுப்புத்தூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிமலை. இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (29) ஐடிஐ படித்து விட்டு விவசாய வேலை செய்து வந்துள்ளார். திருமணம் ஆகவில்லை.
காட்டுப்புத்தூர் அடுத்த சீத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீர்த்தனா (23). இவர்களுக்கு திருமணமாகி 6வருடங்கள் ஆகிறது 5வயதில் மகள் உள்ளார்.
பி.ஏபட்டதாரியான கீர்த்தனா தவிட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நர்சரி பள்ளியில் கடந்த சில மாதங்களாக ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்தநிலையில் கிருஷ்ணமூர்த்திக்கும், கீர்த்தனாவிற்கும் பழக்கம் ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பழக்கம் கள்ள காதலாக மாறி உள்ளது.
இந்த கள்ளக்காதல் விவகாரம் இருவரது வீட்டிற்கும் தெரிந்து கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் கிருஷ்ணமூர்த்தி கீர்த்தனா இருவரும் அப்பகுதியில் உள்ள தனியார் ரைஸ் மில் அருகில் உள்ள மோட்டார் கொட்டகையில் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தொட்டியம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தற்கொலைக்கு காரணம் கள்ளக்காதல் விவகாரமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.