ஆரோக்கியம் என நினைத்து ‘அந்த’ கிழங்கு சாப்பிட்ட இளைஞர்.. முகம் மற்றும் வயிறு வீங்கி துடிதுடித்து பலி..!

Author: Vignesh
2 ஆகஸ்ட் 2024, 7:57 மணி
Quick Share

ஆம்பூர் அருகே உடல் நலத்திற்கு ஆரோக்கியம் என நினைத்து, வீரியம் மிக்க காட்டு கருணை கிழங்கை வேகவைக்காமல், சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, உமராபாத் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் இவர் திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் அடுத்த தார்வழி பகுதியை சேர்ந்த ரஞ்சினி என்ற பெண்ணுடன் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி 3 பிள்ளைகளுடன், தார்வழி பகுதியிலேயே வசித்து வரும் நிலையில், மணிகண்டன், டிராக்டர் ஓட்டி வரும் நிலையில், மாச்சம்பட்டு பகுதியை சேர்ந்த ரவி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில், தேங்காய் ஏற்றிக்கொண்டிருந்த போது, அங்கு நிலப்பகுதியில் இருந்த வீரியம் மிக்க காட்டு கருணைகிழங்கு வகையான கிழங்கை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என நினைத்து, மணிகண்டன் காட்டு கருணைக்கிழங்கை தனது வீட்டிற்கு கொண்டு சென்று கிழங்கை வேகவைக்கமால் சாப்பிட்ட போது, மணிகண்டனுக்கு முகம் மற்றும் வயிறு வீங்கியுள்ளது.

உடனடியாக அவரை அவரது குடும்பத்தினர் சிகிச்சையிற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மேல்சிகிச்சையிற்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து தகவலறிந்து உமராபாத் காவல்துறையினர் மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

  • Deputy Mayor Nagaraj துணை மேயர் மீது 5 பிரிவுகளில் வழக்கு… ஆபாச வார்த்தை, சாதியை வைத்து திட்டிய சிபிஎம் பிரமுகர்!
  • Views: - 156

    0

    0