திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சேத்தூர் ஊராட்சி அய்யனார் புரத்தை சேர்ந்தவர் வெள்ளி மகன் வேலு 10 ஆம் வகுப்புவரை படித்து விட்டு கூலி வேலை செய்து வருகிறார்.
கடந்த 7 ஆம் தேதி இரவு அய்யனார்புரம் அருகேயுள்ள அரவங்குறிச்சியில் சாலையோரக் கடையில் பானிபூரி சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு வந்து படுத்து விட்டார். இரவு முழுவதும் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவரது பெற்றோர் வேலுவை சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்து பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.
தீவிர சிகிச்சையில் இருந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நத்தம் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். பானி பூரி சாப்பிட்டு 17 வயது இளைஞர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.