திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதையாத்திரையாக வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள சரளப்பட்டியை சேர்ந்த அகில் குமார் வயது ( 24 )என்ற பக்தர் பாதயாத்திரையாக வருகை தந்துள்ளார்.
பழனி அருகே உள்ள இடும்பன் குளத்தில் புனித நீராடி கொண்டிருந்தபோது திடீரென வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கியுள்ளார். அருகில் இருந்த தீயணைப்பு துறையினர் அவரை உடனடியாக மீட்டு முதலுதவி அளிக்கபட்டு அருகில் இருந்த பக்தரின் கார் மூலம் பழனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து பழனி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பழனி கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்த பக்தர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உடன் வந்த பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.