வேலூர்: பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா கிராமத்தில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது வாலிபர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் தேவன். இவரது மகன் பெருமாள் (17), இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களுடன் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா கிராமத்தில் உள்ள கிணற்றில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது நண்பர்கள் கிணற்றில் குதித்து குளித்தபோது ஆர்வத்தில் பெருமாள் தானும் கிணற்றில் குதித்துள்ளார். நெடுநேரமாகியும் நீரிலிருந்து பெருமாள் மேலே வரவில்லை. நீச்சல் தெரியாததால் பெருமாள் கிணற்றில் உள்ள சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.
பின்னர் இதுகுறித்து சக நண்பர்கள் பேரணாம்பட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் பேரணாம்பட்டு தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் 3 மணி நேரம் போராடி பெருமாளை சடலத்துடன் மீட்டனர்.
இதுகுறித்து பெருமாளின் தாய் முருகம்மாள் பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து பேர்ணம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். நீரில் மூழ்கி வாலிபர் பலியானது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில், இன்று (பிப்.26) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 50 ரூபாய்க்கு…
தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாமல்லபுரம் அருகே பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட…
முதல்வரே தமிழகத்தில் மூன்றாவது மொழி என்னவென்று முடிவெடுக்க முடியாது, பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் முடிவெடுக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.…
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
This website uses cookies.