தமிழகம்

காதலியுடன் பல முறை உல்லாசம்… அந்தரங்க போட்டோ காட்டி ரூ.20 லட்சம் பறிப்பு : வாலிபரின் வெறிச்செயல்!

இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அடிக்கடி உடலுறவு வைத்து போட்டோ வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்

சென்னை பல்லாவரம் அடுத்த ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண் தனியார் பள்ளியில் தாளாளராக வேலை செய்து வருகிறார்.

இவர் கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2016ம் ஆண்டு படித்து வந்தபோது ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

சதீஷ்குமார் தற்போது தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு கடந்த 2023ம் ஆண்டு தெரியவந்துள்ளது.

பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2023ம் ஆண்டு, மார்ச் மாதம், 26ம் தேதி இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளது.

பின்னர் மூன்று மாதத்தில் சதீஷ்குமார் திருமணத்தில் விருப்பமில்லை எனக் கூறியதாகவும், இது குறித்து அந்தப் பெண் சதீஷின் வீட்டிற்கு சென்று கேட்டபோது தான் வேலை செய்யும் வங்கியில் தன்னுடன் வேலை செய்யும் பெண் ஒருவரை சதீஷ் காதலிப்பதாகவும் அவரை தான் திருமணம் செய்யப்போவதாகவும் கூறியதோடு அந்தப் பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

அதேபோல இருவரும் காதலித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பெண்ணை சதீஷ் பலமுறை கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்துக் கொண்டதாகவும், கல்யாணத்திற்கு மண்டபத்தை பதிவு செய்வதற்கு முன் பணமாக அந்தப் பெண்ணிடம் சதீஷின் அம்மா மல்லிகா கேட்டதின் பேரில் அந்த பெண் அவரது வீட்டிற்கு தெரியாமல் வங்கியில் லோன் எடுத்து பணம் கொடுத்து அதற்கு வட்டியுடன் 1.70 லட்சம் ரூபாய் பணம் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் காதலித்துக் கொண்டிருந்தபோது சதீஷ் தன்னுடன் உடலுறவு வைத்துக் கொண்டதை தனக்குத் தெரியாமல் போட்டோக்கள், வீடியோக்கள் எடுத்ததாகவும் அதை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என மிரட்டியதாகவும், அந்தரங்க போட்டோக்கள், வீடியோக்களை வெளியில் விடாமல் இருப்பதற்கு 20 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தினர் தாம்பரம் மாநகர காவல் ஆணையராக அலுவலகத்தில் புகார் அளித்ததின் பேரில் பல்லாவரம் போலீசார் சம்பவம் தொடர்பாக 296(b), 115(2), 64, 318(2), 351(2), ஆகிய ஐந்து பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!

மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…

2 hours ago

அட செம.!கோவையில் சர்வேதச கிரிக்கெட் மைதானம்…ரசிகர்கள் குஷி.!

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…

2 hours ago

ஜெயிலுக்கு போக ரெடியா இருங்க…ஆபாச வீடியோ லீக்..நடிகை அட்டாக்.!

வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…

3 hours ago

3 நாளில் விவாகரத்து.. 19 வயது மகன் செய்த காரியம்.. ஆடு மேய்த்தபோது திடுக்கிடும் சம்பவம்!

விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…

3 hours ago

தீராத நோய்…வெளியே சொல்ல பயம்..பிரபல நடிகை வருத்தம்.!

காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…

4 hours ago

தண்ணீர் யாருக்கு காட்ட வேண்டும்? விஜய்க்கு அண்ணாமலை பதிலடி!

காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…

4 hours ago

This website uses cookies.