கிருஷ்ணகிரி மாவட்டம் லண்டன்பேட்டை பகுதியில் மிகவும் பரபரப்பான சாலையான சிக்னலில் வாலிபர் ஒருவர் அமர்ந்துகொண்டு மதுபாட்டில் உடன் சாலையில் அமர்ந்து கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் மது அருந்தி கெத்து காட்டினார்.
இந்த சம்பவத்தை கண்ட பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார் நடுரோட்டில் மது அருந்தி சீன் போட்டுக் கொண்டிருந்த வாலிபரை காவல் நிலையத்திற்கு விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் விசாரனையில் இந்த வாலிபர் கிருஷ்ணகிரி அருகே உள்ள மாதேப்பட்டி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (24) எனவும், பெங்களூரில் ஹோட்டலில் பணியாற்றி வருவதும் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். நகரின் பரபரப்பான முக்கியமான சிக்கனில் கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்களிடையே முகம் சுளிக்கும் வகையில் மது பாட்டிலுடன் அமர்ந்து மது அருந்தி வைத்துக் கொண்டு சீன் போட்ட இந்த நபரால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
This website uses cookies.