அறிவிக்கப்பட்ட அகவிலைப்படியை உயர்வை உடனடியாக வழங்கக்கோரி நெல்லையில் ஆவின் பால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு ஜுலை மாதம் முதல் அகவிலைப்படியை 3% உயர்த்த தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் பின்னர் கடந்த ஜனவரி 1ம் தேதி மீண்டும் 4% அகவிலைப்படி உயர்வு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள ஆவின் தலைமையகம் நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில் கூட, அங்குள்ள ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நஷ்டத்தை சுட்டிக்காட்டி நெல்லையில் உள்ள ஆவின் பால் ஊழியர்களுக்கு இதுவரை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனை கண்டித்தும், அறிவிக்கப்பட்ட அகவிலைப்படியை உயர்வை உடனடியாக வழங்க கோரியும் நெல்லை ஆவின் பால் ஊழியர்கள் இன்று ரெட்டியார்ப்பட்டி ஆவின்பால் பண்னை முன்பாக போராட்டம் நடத்தினர்.
அரசு தங்களின் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால், உள்ளிருப்பு போராட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட பலகட்ட போராட்டங்களை நடத்த இருப்பதாகவும் நெல்லை ஆவின் பால் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.