தமிழகம்

பாத்ரூம் கூட போகக்கூடாது.. 8 நாட்கள் உணவின்றி தவித்த நீலகிரி பெண்கள்.. டிஜிட்டல் அரெஸ்ட்டின் உச்சக்கட்டம்!

நீலகிரியில் டிஜிட்டல் அரெஸ்ட்டில் சிக்கிய இளம்பெண் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் இருந்து மொத்தமாக 30 லட்சம் ரூபாயை மர்ம கும்பல் மோசடியாகப் பெற்றுள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் 26 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஐடி நிறுவனத்தில் வீட்டில் இருந்தே வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தப் பெண்ணுக்கு வெளிநாட்டு எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது.

அப்போது, சர்வதேச கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக தங்களை அறிமுகப்படுத்தி உள்ளனர். மேலும், மும்பையிலிருந்து சீனாவுக்குச் செல்லும் பார்சல் ஒன்றில் போதைப் பொருட்கள் உள்ளதாகவும், அந்தப் பார்சலில் உங்களின் ஆதார் கார்டு, பாஸ்போர்ட் போன்றவையும் உள்ளதாகவும் கூறி உள்ளனர்.

அது மட்டுமல்லமால், இது தொடர்பாக உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும், எனவே மும்பை சைபர் கிரைம் போலீசிடம் இருந்து உங்களுக்கு அழைப்பு வரும் எனக் கூறி அழைப்பைத் துண்டித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள், ஸ்கைப் ஆப் மூலம் வீடியோ கால் ஒன்று வந்துள்ளது.

அப்போது, “உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்து உள்ளோம். எனவே விசாரணை முடியும் வரை எங்கும் நகரக்கூடாது, அழைப்பையும் துண்டிக்கக் கூடாது. இதுகுறித்து வேறு யாரிடமும் தகவலைக் கசியவிட்டால் உங்களுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுவிடும்” என்றும் அவர்கள் எச்சரிக்கை கொடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: லக்கி பாஸ்கர் பட துல்கர் போல் வாழ ஆசை.. எகிறி குதித்து தப்பியோடிய பள்ளி மாணவர்கள்!

இதனால் அடுத்த 8 நாட்களுக்கு ஏதும் உண்ணாமலும், உறங்காமலும் இயற்கை உபாதைகளுக்கு கூடச் செல்ல முடியாமல் தனி அறையில் தவித்து வந்துள்ளார். மேலும், உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள அனைத்து பணத்தையும் எங்களுக்கு அனுப்ப வேண்டும். நாங்கள் அதை ஆய்வு செய்துவிட்டு உங்களுக்கு திரும்ப அனுப்புகிறோம் எனவும் கூறியுள்ளனர்.

இதனை நம்பிய அந்தப் பெண், தன்னுடைய வங்கிக் கணக்கில் இருந்த 16 லட்சம் ரூபாயை, அவர்கள் கூறிய வங்கிக் கணக்கிற்கு அனுப்பி உள்ளார். இவ்வாறு அப்பெண் பணம் அனுப்பிய உடனே அந்த அழைப்பைத் துண்டித்து உள்ளனர். பின்னர், அந்தப் பெண் அவர்களை மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றும், அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

நீலகிரியில் தொடரும் டிஜிட்டல் அரெஸ்ட்: இதனால் தாம் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த அப்பெண், இதுகுறித்து நீலகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இந்தப் புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், நீலகிரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியைக்கும் அழைப்பு வந்து உள்ளது.

அப்போத், டெல்லி போலீசில் இருந்து பேசுவதாகக் கூறி ஒரு நாள் முழுவதும் டிஜிட்டல் அரெஸ்ட் செய்த அக்கும்பல், அவரிடம் 15 லட்சம் ரூபாயைப் பறித்துக் கொண்டு அழைப்பைத் துண்டித்து உள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் பரபரப்பு நிலவுகிறது.

Hariharasudhan R

Recent Posts

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

16 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

16 hours ago

பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!

பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…

17 hours ago

திருமணம் செய்த உடனே குழந்தை பிறக்க வேண்டுமென்றால்… சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி பேச்சு!

தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…

18 hours ago

விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு.. சீமான் சொன்ன அதிரடி காரணம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…

19 hours ago

2 மகன்களை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…

21 hours ago

This website uses cookies.