பரமக்குடி அருகே வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாய்க்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து தொண்டிக்கு நண்பரின் திருமணத்திற்காக மதுரையைச் சேர்ந்த பாலமுருகன், அருண்குமார், ஜெயக்குமார் ஆகிய மூவர் ஒரு சிகப்புக் கலர் டவேரா காரில் வந்து கொண்டிருந்தார்கள்.
நள்ளிரவு சுமார் 2.30 மணியளவில் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த கார் பரமக்குடி நான்கு வழிச்சாலையில் விபத்தில் சிக்கியது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வேந்தோணி ஜங்ஷன் அருகே நான்கு வழிச் சாலையின் நடுவில் அதி வேகத்தை கட்டுப்படுத்த வைக்கப்பட்டிருந்த பேரிகார்டு பகுதியில் வேகம் குறையாமல் கடக்க முயன்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி சிமெண்ட் தடுப்பை தாண்டி காருடன் கால்வாய்க்குள் விழுந்தனர்.
இதில் பாலமுருகன் என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார் மற்ற இருவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து தற்போது சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.