பழனி அடிவாரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கொலை குற்றவாளி உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்து உள்ளதாக திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரனுக்கு தொடர்பு புகார்கள் சென்றது.
இதையடுத்து காவ்லதுறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் பழனியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அடிவாரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த மூவரை பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது அவர்களிடம் 127பொட்டலங்கள் கொண்ட 750 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது பழனி பகுதியை சேர்ந்த மெர்சல் (வயது 22) என்ற சந்துரு, பரதன்(வயது 22) மற்றும் பாலமுருகன் என்பதும், இவர்கள் மூவரும் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.
மேலும் கைதான மூவரில் மெர்சல் என்பவர் மீது இரண்டு கொலை வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து மூவரையும் அடிவாரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
ஸ்ருதிஹாசனின் பிரேக்கப் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். இருவரும் லிவ்…
This website uses cookies.