பழனி அடிவாரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கொலை குற்றவாளி உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்து உள்ளதாக திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரனுக்கு தொடர்பு புகார்கள் சென்றது.
இதையடுத்து காவ்லதுறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் பழனியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அடிவாரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த மூவரை பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது அவர்களிடம் 127பொட்டலங்கள் கொண்ட 750 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது பழனி பகுதியை சேர்ந்த மெர்சல் (வயது 22) என்ற சந்துரு, பரதன்(வயது 22) மற்றும் பாலமுருகன் என்பதும், இவர்கள் மூவரும் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.
மேலும் கைதான மூவரில் மெர்சல் என்பவர் மீது இரண்டு கொலை வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து மூவரையும் அடிவாரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.