Categories: தமிழகம்

2 வருடமாக வரவேற்பாளராக நடித்து நோயாளிகள் கட்டணத்தில் ரூ.40 லட்சம் கையாடல் : தனியார் ஆஸ்பத்திரியில் நூதன கொள்ளை.. எஸ்கேப் ஆன லேடி!!

கோவையில் தனியார் மருத்துவமனையில் நோயாளிகள் செலுத்திய ரூ.40 லட்சம் கட்டணத்தை சுருட்டிக்கொண்டு தலைமறைவாகியுள்ள பெண் வரவேற்பாளர் லதாவைப் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கோவை சாய்பாபா காலணியில் இயங்கி வரும் பிரபலமான (“ஒன் கேர்”) என்கின்ற தனியார் மருத்துவமனையில் இந்த மோசடி நடந்துள்ளது. கோவிட் காலத்தில் இந்த மருத்துவமனையில் நோயாளிகள் நிரம்பி வழிந்தனர்.

மருத்துவமனையின் தலைமை மருத்துவர் நோயாளிகளின் ரிஜிஸ்டர் எண்ணிகையையும் வரவு செலவு கணக்கினையும் சோதித்து உள்ளார். அப்போது நோயாளிகள் செலுத்திய பணம் மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பல நோயாளிகளின் பெயர் கணினியில் பதிவேற்றம் செய்யும் நிலையில் அவர்கள் செலுத்திய மருத்துவ கட்டணம் கணக்கில் சேர்க்காமல் கையாடல் நடந்திருப்பது தெரியவந்தது.

அது தொடர்பாக பெண் வரவேற்பாளர் லதாவை அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது அவர் தனியாக வைத்திருந்த பணத்தை நிர்வாகத்திடம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2021 அக்டோபர் மாதம் வரை கோவிட் காலத்தில் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் பட்டியலை சோதித்தனர்.

அப்போது ரூ.40 லட்சம் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இரண்டு வருட காலங்களில் பெண் வரவேற்பாளர் லதா இரவு பணியை கேட்டு வாங்கி வந்துள்ளார்.

அப்போது சிகிச்சைக்காக வருகின்ற நோயாளிகளின் பெயரை கணினியில் பதிவேற்றம் செய்துவிட்டு பின்னர் சிகிச்சை முடிந்த பின்பு நோயாளிகள் செலுத்தும் மருத்துவ கட்டணத்தை மருத்துவமனை கணக்கில் ஏற்றாமல் தனியாக மறைத்து வைத்துள்ளார்.

பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் போது அந்த பணத்தை எடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உள்நோயாளிகளாக மருத்துவமனையில் அனுமதி ஆனவர்களின் மருத்துவ கட்டணத்தை கையாடல் செய்தால் மாட்டிக்கொள்வோம் என்று கருதிய லதா ஒபி என்று சொல்லப்படும் புறநோயாளிகளின் மருத்துவக் கட்டணத்தை நூதன முறையில் கையாடல் செய்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சாய்பாபா காலணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் லதா மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் லதா தலைமறைவு ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் லதாவுக்கு துணைப்போன மருத்துவமனை ஊழியர்களிடமும் மோசடி குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் பணம் ரூ.40 லட்சம் பெண் வரவேற்பாளர் சுருட்டியது அறிந்த இதர தனியார் மருத்துவதுறையினர் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

6 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

6 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

6 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

7 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

7 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

7 hours ago

This website uses cookies.