கடை திறப்பு விழாவை முன்னிட்டு சலுகை விலையில் பிரியாணி ஏராளமான கூடியதால் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.
திருப்பூர் – மங்கலம் சாலை, பழக் குடோன் பேருந்து நிறுத்தம் அருகே புதிதாக பிரியாணி கடை இன்று திறக்கப்பட்டது. கடை திறப்பு விழா சலுகையாக 100 ரூபாய்க்கு 1 கிலோ சிக்கன் பிரியாணி, 100 கிராம் சில்லி, 2 அவித்த முட்டை என அறிவிக்கப்பட்டது.
இதனால் கடை திறந்த உடன் ஏராளமானோர் குவிய துவங்கினர். முக்கிய சாலையில் கடை அமைந்திருந்ததால் கடைக்கு வந்த கூட்டம் சாலையிலும் நின்றதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனடியாக தகவலறிந்து விரைந்து சென்ற மத்திய காவல் நிலைய போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தி சாலையோரம் வரிசையாக நிற்க வைத்தனர். போதிய ஏற்பாடுகள் செய்த பின்னர் சலுகை அறிவிக்க வேண்டும் என கடை உரிமையாளருக்கு அறிவுறுத்தினர்.
முதல் நாளில் 200 கிலோ பிரியாணி செய்த நிலையில் ஏராளமானோர் கூடியதால் 1 மணி நேரத்தில் மொத்தமும் விற்பனையானது. இதனால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…
நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
பிரியாங்காவுக்கு நடந்த 2வது திருமணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் திருமணம் செய்த வசி சாச்சி குறித்து பல…
சச்சின் ரீரிலீஸ் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து மாஸ் ஹிட் அடித்த “சச்சின்” திரைப்படம் கடந்த 18…
90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…
This website uses cookies.