பாஜக பிரமுகர் வீட்டில் அதிரடி RAID : போட்டுக் கொடுத்த திமுக? தேர்தல் பறக்கும் படைக்கு காத்திருந்த TWIST!!
திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் பாஜக நிர்வாகி ஓ பி சி அணி மாநில செயலாளர் கே ஆர் வெங்கடேஷ் வீட்டில் மாதவரம் தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
ஏற்கனவே அவர் மீது ஆளும் கட்சி நிர்வாகிகள் தரப்பில் பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டு அடிக்கடி அவரது வீட்டில் பல்வேறு சோதனைகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அவர் மத்திய சென்னை பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் வினோஜ் பி செல்வம் அவர்களுக்கு பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் இறுதி கட்டப் பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில் அவரது வீட்டில் வாக்காளர்களுக்கு வழங்க பரிசு பொருட்கள் பணம் பதுக்கி வைத்திருக்கலாம் என புகார் தெரிவித்ததை அடுத்து அவரது வீட்டில் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பத்துக்கும் மேற்பட்டவர்கள் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் படிக்க: மன்சூர் அலிகானுக்கு என்ன ஆச்சு? ICU பிரிவில் அனுமதி.. வேலூரில் இருந்து சென்னை மாற்றம்!!
அங்கு எதுவும் கிடைக்கப்பெறாததால் ஏமாற்றத்துடன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சென்றனர். கே ஆர் வெங்கடேசன் உறவினர் பாடியநல்லூர் பார்த்திபன் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட நிலையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக போலீஸ் பாதுகாப்பு வேண்டுமென உயர் நீதிமன்றம் மூலம் அணுகிய நிலையில் அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதை சுட்டிக்காட்டி அவருக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் மறுத்த நிலையில் தற்போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவரது வீட்டில் பரிசு பொருட்கள் பணம் பதுக்கி இருக்கலாம் என்கிற அடிப்படையில் சோதனை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரபல தொழிலதிபரான கே ஆர் வெங்கடேசன் கல்வி அறக்கட்டளைகளை நடத்தி வருவதுடன் தொடர்ந்து பாஜகவில் தீவிரமாக பணியாற்றி வருவதால் தயாநிதி மாறனுக்கு ஆதரவாக இது போன்று வேண்டுமென்று பொய்யான புகார்களை ஆளும் கட்சியினர் தெரிவிப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
This website uses cookies.