Categories: தமிழகம்

விநாயகர் சதுர்த்திக்கு அதிரடி கட்டுப்பாடுகள்.. சிலை உயரத்துக்கு நிபந்தனை : பட்டாசு வெடிக்க தடை!

விநாயகர் சதூர்த்தி விழா செப்டம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவையொட்டி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தவுள்ளனர்.

கடந்த ஆண்டை பொறுத்தவரை ஆயிரக்கணக்கான சிலைகள் போலீசார் அனுமதியோடு பல இடங்களில் வைக்கப்பட்டு அடுத்த ஒரு சில நாட்களில் கடற்கரையில் கரைக்கப்பட்டது. இந்தநிலையில் இந்தாண்டு விநாயகர் சதூர்த்தியையொட்டி விநாயகர் சிலை வைப்பது தொடர்பான கட்டுப்பாடுகளை தமிழக டிஜிபி அறிவித்துள்ளார்.

அதன்படி, வேற்று மத வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அருகில் விநாயகர் சிலை வைக்க கூடாது என தெரிவித்துள்ளார். மேலும் விநாயகர் சிலைகளை சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் வேதிப்பொருட்களை கொண்டு செய்யக் கூடாது என கூறியுள்ளார்.

தனிநபர்களுக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்படும் சிலைகளுக்கு அதன் உரிமையாளர்களிடம் தடையில்லா சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். விநாயகர் சிலைகள் மேடையுடன் சேர்த்து 10 அடிக்கு மேல் உயரம் இருக்கக் கூடாது.

மேலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களின்போது பிற மதத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பக் கூடாது எனவும் ஒலிபெருக்கியில் வைப்பதற்கு அந்த, அந்த பகுதியில் உள்ள காவல் ஆய்வாளரிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சாரம் பெறுவதற்கான விபரத்தையும் கடிதம் வாயிலாக கடிதம் வாயிலாக தெரியப்படுத்த வேண்டும் அந்த அறிவிப்பில் டிஜிபி தெரிவித்துள்ளார்.

இதே போல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், பள்ளிவாசல்களில் தொழுகை நேரங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை அனுமதிக்க கூடாது. மேலும் பதற்றமான பகுதிகள் வழியாகவும் ஊர்வலத்தை அனுமதிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மற்ற வழிபாட்டு தலங்களை ஊர்வலம் கடந்து செல்லும்போது மேளதாளங்களை இசைக்கவும் பட்டாசுகளை வெடிக்கவும் அனுமதிக்க கூடாது என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்த மாதம் 30ஆம் தேதிக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மெரினா கடலில் இளம்பெண்கள் செய்த செயலைப் பாருங்க.. ரோந்து போலீசார் பகீர் தகவல்!

சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…

2 minutes ago

வீர தீர சூரன் நான் இல்லை, நீங்கதான்- திண்டுக்கலில் சீயான் விக்ரம் செய்த சம்பவம்…

கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

11 minutes ago

காரை துரத்திய பைக்.. கல் வீசி கண்ணாடி உடைப்பு : NH சாலையில் இளைஞர்கள் நடத்திய போதை ஆட்டம்!

காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…

36 minutes ago

துர்நாற்றம் வீசிய வீடு.. கொடூரமாகக் கிடந்த கருணாஸ் கட்சி நிர்வாகி.. சென்னையில் அதிர்ச்சி!

சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…

45 minutes ago

செங்கோட்டையனும், விஜயும்.. அண்ணாமலை சொன்ன சீக்ரெட்!

மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…

2 hours ago

This website uses cookies.