சுதந்திர தின விழாவிற்கு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளாத ஊராட்சி செயலரை கடுமையாக கண்டித்து அதிரடியாக பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நாளை ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் 75 வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் சுதந்திர விழா கொண்டாட்டத்திற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் மோகன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா ஆகியோர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சிகளில் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று விக்கிரவாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்குச்சிபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட போது மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின கொண்டாட்டம் குறித்த நெறிமுறைகள் ஏற்கனவே வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் அறிவுறுத்தப்பட்ட நிலையில் விழாவிற்கான அழைப்பிதழ் தேசியக்கொடி ஏற்ற கொடிக்கம்பம் உள்ளிட்ட எந்த அடிப்படை முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்படாததால் வடக்குச்சிபாளையம் ஊராட்சி செயலாளர் முருகன் என்பவரை மாவட்ட ஆட்சியர் மோகன் கடுமையாக கண்டித்ததோடு உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
மாவட்ட ஆட்சியரின் இந்த அதிரடி நடவடிக்கை அனைத்து ஊராட்சிகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரஜினிக்கு நிகர் வேற யாரும் இல்லை.! ரஜினியின் மேக்கிங் வீடீயோவை சீக்கிரமாக ரிலீஸ் பண்ணுங்க,பல பேருக்கு அது உதவும் என…
பிசிசிஐ புதிய விதிகள் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும்,அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ பல புதிய விதிமுறைகளை விதித்திருப்பது…
பேட்டக்காரனாக நடிக்க இருந்த பார்த்திபன் தமிழ் திரையுலகில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.தற்போது…
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இது குறித்து…
திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ்…
பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…
This website uses cookies.