சுதந்திர தின விழாவிற்கு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளாத ஊராட்சி செயலரை கடுமையாக கண்டித்து அதிரடியாக பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நாளை ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் 75 வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் சுதந்திர விழா கொண்டாட்டத்திற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் மோகன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா ஆகியோர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சிகளில் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று விக்கிரவாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்குச்சிபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட போது மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின கொண்டாட்டம் குறித்த நெறிமுறைகள் ஏற்கனவே வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் அறிவுறுத்தப்பட்ட நிலையில் விழாவிற்கான அழைப்பிதழ் தேசியக்கொடி ஏற்ற கொடிக்கம்பம் உள்ளிட்ட எந்த அடிப்படை முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்படாததால் வடக்குச்சிபாளையம் ஊராட்சி செயலாளர் முருகன் என்பவரை மாவட்ட ஆட்சியர் மோகன் கடுமையாக கண்டித்ததோடு உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
மாவட்ட ஆட்சியரின் இந்த அதிரடி நடவடிக்கை அனைத்து ஊராட்சிகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.