மதுரை காந்தி மியூசியம் ரோட்டிலுள்ள மாநகராட்சியின் ராஜாஜி சிறுவர் பூங்காவில் ‘காதலர்கள்’ போர்வையில் எல்லை மீறும் ‘சில்மிஷ’ ஜோடிகளை திருத்த ‘நாய் காதல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என கடுமையாக எச்சரித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
மதுரை அழகர்கோவில், ராஜாஜி சிறுவர், திருப்பரங்குன்றம், கே.கே.நகர் சுந்தரம்பூங்காக்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காதலர்கள் என்ற பெயரில் சில்மிஷம் செய்யும் ஜோடிகளும் வந்து பெரும் இம்சையை கொடுக்கின்றனர்.
காந்தி மியூசியத்திலும் இவர்கள் தொல்லை அதிகரித்ததால் உள்ளே அமர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் ராஜாஜி சிறுவர்பூங்கா இவர்களின் ‘சில்மிஷ’ கூடாரமாக உள்ளது. பூங்காவில் அடர்ந்துள்ள செடி, கொடிகளுக்கு மத்தியில் ‘நெருக்கமாக’ அமர்ந்து நாட்டு நடப்புகளை அலசுவது போல் மணிக்கணக்கில் பேசி தள்ளுகிறார்கள்.
குழந்தைகளுடன் வரும் பெற்றோர் முகம் சுளிக்கும் அளவுக்கு சில்மிஷத்தில் ஈடுபடுகின்றனர். அதில் பலர் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்பதுதான் அதிர்ச்சி.
பொறுத்து பார்த்த மாநகராட்சி ‘நாய் காதல் செய்யாதீர்கள்’ என எச்சரிக்கை பலகையும் வைத்தது. அதையும் சில்மிஷர்கள் மதிப்பதில்லை.
இதுபோன்ற ஜோடிகளை பூங்காவுக்குள் அனுமதிக்க கூடாது. கூடுதல் பாதுகாவலர்களை நியமித்து இவர்களை விரட்ட மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது..
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.