நடிகர் பாபி சிம்ஹாவுக்கு கொலை மிரட்டல்…. கூலியாட்களுடன் சிக்கிய முக்கியப்புள்ளி!!!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் நடிகர் பாபி சிம்ஹாவுக்கு சொந்தமாக நிலம் உள்ளது.இவர் கொடைக்கானலை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர்கள் ஜமீர்,காசிம்முகமது ஆகியோரை வைத்து கட்டிடம் கட்டிவந்துள்ளார்.
இதனிடையே பாபி சிம்ஹாவுக்கும் கட்டிட ஒப்பந்ததாரர்களுக்குமிடையே ஒரு சில காரணங்களால் மன கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டுமான பணி தாமதமாக நடைபெற்று வந்துள்ளது. இதன் காரணமாக பாபி சிம்ஹா அவர்களிடம் கட்டிடத்தை விரைந்து முடித்துத்தர கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கட்டிட ஒப்பந்ததாரர்கள் இருவரும் நடிகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடும் சொற்களை பேசியதாகவும், இவர்களுடன் சேர்ந்து கொடைக்கானலை சேர்ந்த உசேன், பேத்துப்பாறை கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் ஆகியோரும் மிரட்டியதாகவும் நடிகர் பாபி சிம்ஹா கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகார் ஏற்றுக் கொண்ட காவல் துறையினர் இவர்கள் மீது கொலை மிரட்டல், ஏமாற்றுதல், அருவருக்கத்தக்க வார்த்தைகளை பேசுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முறையான அனுமதி பெற்று தான் கட்டிடம் கட்டி வருவதாகவும், தன்னை பேத்துப்பாறை மகேந்திரன் என்பவர் கலங்கப்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் மகேந்திரன் மீது பல்வேறு மோசடி வழக்குகள் உள்ள நிலையில் மீண்டும் மீண்டும் இது போன்ற நடவடிக்கைகள் ஈடுபடும் இவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகர் பாபி சிம்ஹா கூறியுள்ளார்
ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…
வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…
கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…
எல்லாம் ஸ்பாட்ல வர்ரது பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியை படமாக்க ஸ்கிரிப்ட் படி செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் பல…
This website uses cookies.