சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில வருடங்களாகவே புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பை வழங்கி வருகிறார். பா. ரஞ்சித் இயக்கத்தில் காலா-வும், கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்திலும் நடித்தார். இதைத் தொடர்ந்து, சிறுத்தை சிவா இயக்கிய ‘அண்ணாத்த’ படத்தில் தங்கை செண்டிமென்ட் காட்சியில் நடித்து ரசிகர்கள் மனதை கலங்க வைத்தார்.
தற்போது மீண்டும் இளம் இயக்குனர்களில் ஒருவரான நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து புதுமுக இயக்குனர்களுக்கு அதிக வாய்ப்பை அள்ளிக் கொடுத்து வரும் ரஜினிகாந்த், அடுத்தடுத்து இளம் இயக்குனர்கள் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.
தயாரிப்பாளர் சுபாஸ்கரனுடன் இரண்டு படங்களில் நடிகர் ரஜினிகாந்த் ஒப்பந்தமாகியுள்ளார். அதில் ஒன்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும்’லால் சலாம்’. அடுத்து ‘தலைவர் 171’ என்று அழைக்கப்படும் படம். இந்த படத்தை பி வாசு இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன் தயாரிப்பு பிரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இப்படத்தை பி வாசு இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காகவே, லாரன்ஸை வைத்து எடுக்கப்பட்டு வரும் சந்திரமுகி 2 படத்திற்கு சற்று பிரேக் கொடுக்க இருக்கிறாராம்.
இயக்குநர் வாசு இதற்கு முன்பு ரஜினிகாந்துடன் ‘பணக்காரன்’, ‘மன்னன்’, ‘சந்திரமுகி’, ‘குசேலன்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த்தின் இந்த முடிவு அவரது ரசிகர்களிடையே குஷியை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.