நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது மிக்க மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தேவைப்பட்டால் அவருடன் அரசியல் பயணத்தில் கூட நிற்பேன் என இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி வந்திருந்தார்.
பிரகாரம் முழுவதையும் சுற்றிப் பார்த்து அவர் சாமி தரிசனம் மேற்கொண்டார். மேலும், அங்குள்ள புத்தக கடையில் புத்தகத்தை தேடிப் பார்த்து வாங்கினார். பின்பு அவருடன் அங்கிருந்த பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொடர்ச்சியாக சினிமா துறையினர் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது. குறிப்பாக நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.மக்கள் பணிக்காக தேவைப்பட்டால் அவருடன் அரசியல் பயணத்திலும் கூட நிற்பேன்,” எனக் கூறினார்.
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
This website uses cookies.