நடிகர் சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு பழனியில் சமூக சேவைகள் செய்து வரும் ரசிகர்களுக்கு பாராட்டு தெரிவித்த நடிகர் சிவக்குமார், அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட நடிகர் சூர்யா ரசிகர் மன்றத்தினர் சார்பில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர் மன்றம் சார்பில் கடந்த சில நாட்களாக பழங்குடியினர் மக்களுக்கு மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு, இ சேவை மையம் அமைத்து தரப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல் இன்றும் பழனியில் உள்ள உழவர் சந்தை முன்பாக காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்களுக்கு துணிப்பைகளை வழங்கி பிளாஸ்டிக் ,(நெகிழி ) பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், பொதுமக்களுக்கு இலவசமாக உழவர் சந்தைக்கு வந்த 400 பேருக்கு துணிப்பை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சூர்யா ரசிகர் மன்ற மாவட்ட நகர நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
நடிகர் சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு பழனி உழவர் சந்தையில் துணிப்பைகள் வழங்கி சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் ரசிகர் மன்றத்தினரை பாராட்டிய நடிகரும், நடிகர் சூர்யாவின் தந்தைமான சிவக்குமார்,
‘ரசிகர்களை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், முதலில் தங்களின் குடும்பத்தை கவனியுங்கள். பின்பு சேவை செய்யுங்கள்,’ என அறிவுரை வழங்கினார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.