Categories: தமிழகம்

ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் நடிகர் சூரி… அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி : பொதுமக்கள் சரமாரிக் கேள்வி!

மதுரையில் நட்சத்திர நண்பர்கள் என்னும் அமைப்பை சேர்ந்தவர்கள் பல்வேறு சமூக நல பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தினமும் மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 5-ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இந்த அமைப்பு சார்பில் இன்று வரை 200 நாட்களுக்கு மதிய உணவு தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அண்மையில் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தி இருந்தது.

இந்த நிலையில், 2 தினங்களுக்கு முன்பு மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் மாநகர காவல் ஆணையர், உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் மருத்துவமனைக்கு வருகை தர பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை விதித்தனர். இந்நிலையில் இன்று வழக்கம் போல நட்சத்திர நண்பர்கள் அமைப்பை சேர்ந்தவர்கள், மருத்துவமனை வளாகத்திற்கு நோயாளி மற்றும் அவருடன் வந்தவர்களுக்கு உணவு வழங்க வந்தனர்.

அப்போது, மருத்துவமனை பாதுகாவலர்கள் அவர்களை தடுத்து புதிய விதிமுறைகளை எடுத்துரைத்து வெளியேற்றியுள்ளனர். இதனால் மருத்துவமனையில் உணவை எதிர்பார்த்து காத்திருந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதோடு மருத்துவமனை வளாகத்தில் உள்ள நடிகர் சூரியின் அம்மன் உணவகம் உள்ளது. அதன் ஊழியர்கள் தங்களது வியாபாரம் பாதிப்படைவதாக கூறி அவர்களை வெளியே அனுப்பி வைத்த சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து உணவுக்காக காத்திருந்த பொதுமக்கள் கூறுகையில், எங்களை போன்ற வறுமையில் உள்ள குடும்பத்தினர் சிகிச்சை பெற அரசு மருத்துவமனையை நம்பி தான் வருகிறோம். ஆனால் இங்கு விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது. இது போன்ற சமூக அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் மருத்துவமனைக்கு வருகை தந்து கொடுக்கும் உணவுகளை நம்பி தான் எங்களை போன்ற மனிதர்கள் உள்ளனர்.

அதுமட்டுமின்றி இங்குள்ள நடிகர் சூரியின் அம்மன் உணவகம் பாதிப்படையும் என்பதால் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அனுமதிக்காமல் விரட்டுகிறார்கள். மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு எங்களுக்கு உணவு வழங்கும் நபர்களுக்கு மருத்துவமனை வளாகத்தில் இடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும். ஏழை மக்களுக்காக இது போன்ற அமைப்புகள் உணவுகள் நம்பி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களை சார்ந்த குடும்பத்தினர் உணவருந்த ஏற்பாடுகளை செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மனைவிக்கு அறிமுகமான நபர்.. கணவரும் சேர்ந்து செய்த செயல்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்!

சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

32 minutes ago

தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?

படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…

1 hour ago

2 மாதங்களாக கோவை சிறையில் விலகாத மர்மம்.. போலீசார் முக்கிய நகர்வின் பின்னணி!

கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…

2 hours ago

தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…

2 hours ago

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

3 hours ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

3 hours ago

This website uses cookies.