மதுரையில் நட்சத்திர நண்பர்கள் என்னும் அமைப்பை சேர்ந்தவர்கள் பல்வேறு சமூக நல பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தினமும் மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 5-ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இந்த அமைப்பு சார்பில் இன்று வரை 200 நாட்களுக்கு மதிய உணவு தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அண்மையில் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தி இருந்தது.
இந்த நிலையில், 2 தினங்களுக்கு முன்பு மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் மாநகர காவல் ஆணையர், உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் மருத்துவமனைக்கு வருகை தர பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை விதித்தனர். இந்நிலையில் இன்று வழக்கம் போல நட்சத்திர நண்பர்கள் அமைப்பை சேர்ந்தவர்கள், மருத்துவமனை வளாகத்திற்கு நோயாளி மற்றும் அவருடன் வந்தவர்களுக்கு உணவு வழங்க வந்தனர்.
அப்போது, மருத்துவமனை பாதுகாவலர்கள் அவர்களை தடுத்து புதிய விதிமுறைகளை எடுத்துரைத்து வெளியேற்றியுள்ளனர். இதனால் மருத்துவமனையில் உணவை எதிர்பார்த்து காத்திருந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதோடு மருத்துவமனை வளாகத்தில் உள்ள நடிகர் சூரியின் அம்மன் உணவகம் உள்ளது. அதன் ஊழியர்கள் தங்களது வியாபாரம் பாதிப்படைவதாக கூறி அவர்களை வெளியே அனுப்பி வைத்த சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து உணவுக்காக காத்திருந்த பொதுமக்கள் கூறுகையில், எங்களை போன்ற வறுமையில் உள்ள குடும்பத்தினர் சிகிச்சை பெற அரசு மருத்துவமனையை நம்பி தான் வருகிறோம். ஆனால் இங்கு விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது. இது போன்ற சமூக அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் மருத்துவமனைக்கு வருகை தந்து கொடுக்கும் உணவுகளை நம்பி தான் எங்களை போன்ற மனிதர்கள் உள்ளனர்.
அதுமட்டுமின்றி இங்குள்ள நடிகர் சூரியின் அம்மன் உணவகம் பாதிப்படையும் என்பதால் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அனுமதிக்காமல் விரட்டுகிறார்கள். மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு எங்களுக்கு உணவு வழங்கும் நபர்களுக்கு மருத்துவமனை வளாகத்தில் இடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும். ஏழை மக்களுக்காக இது போன்ற அமைப்புகள் உணவுகள் நம்பி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களை சார்ந்த குடும்பத்தினர் உணவருந்த ஏற்பாடுகளை செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
This website uses cookies.